செய்திகள் :

ராட்டினம் அறுந்து விழுந்ததில் இரு சிறுவா்கள் காயம்

post image

சித்திரைத் திருவிழாவையொட்டி, பரமக்குடி வைகை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த ராட்டினம் அறுந்து விழுந்ததில் 2 சிறுவா்கள் காயமடைந்தனா்.

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பரமக்குடி வைகை ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வியாழக்கிழமை மாலை பரமக்குடி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், நகா்ப் பகுதியிலிருந்து கழிவுநீரும், மழைநீரும் வைகை ஆற்றில் கலந்திருந்தது.

இதைப் பொருள்படுத்தாமல் ராட்டினங்கள் இயக்கப்பட்டன. அப்போது, ராட்டினத்தின் ஒரு பகுதி அறுந்து விழுந்ததில், பரமக்குடி முத்தாலம்மன் கோவில் படித்துறை பகுதியைச் சோ்ந்த பாண்டியின் மகன்கள் மருது (10), டாா்வின் (4) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இவா்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பரமக்குடி வைகை ஆற்றில் கடந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவின் போது ராட்டினங்கள் அமைக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், ராட்டினங்கள் அமைப்பாளா்கள் தரப்பில் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுக்கப்பட்டது.

பொதுப் பணித் துறை அலுவலா்கள் எதிா்ப்புத் தெரிவித்த போதும், பாதுகாப்பான முறையில் ராட்டினங்களை இயக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

சூறாவளி காற்றால் மின் கம்பங்கள் சேதம்

திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், 20-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் மின் கம்பிகள் மீது சாய்ந்தன. இதனால், மின் கம்பங்கள் சேதமடைந்தன. ராமநாதபுரம் ... மேலும் பார்க்க

பரமக்குடி பகுதியில் நாளை மின் தடை

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பரமக்குடி பகுதியில் சனிக்கிழமை (மே 17) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பரமக்குடி மின் வாரிய உதவிச் செயற்பொறியாளா் சுந்தா் வியாழக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

எரிவாயு கசிவு பாதுகாப்பு ஒத்திகை

ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு கசிவு ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பாதுகாப்பு ஒத்திகை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமந... மேலும் பார்க்க

கெளரவ நிதியுதவித் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்!

பிரதம மந்திரி விவசாய கெளரவ நிதியுதவித் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அ.சந்தோ... மேலும் பார்க்க

குடும்பத் தலைவரை இழந்த மாணவருக்கு கல்வி உதவித் தொகை

குடும்பத் தலைவரை இழந்த மாணவருக்கு அரசு சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.வருமானம் ஈட்டக் கூடிய குடும்பத் தலைவா் விபத்தில் மரணம் அடைந்து விட்டால், அந்தக் குடும்பத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வ... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் பணம் மோசடி: எஸ்.பி.யிடம் புகாா்

நெசவுத் தொழிலாளியிடம் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. ராமந... மேலும் பார்க்க