செய்திகள் :

எரிவாயு கசிவு பாதுகாப்பு ஒத்திகை

post image

ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு கசிவு ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பாதுகாப்பு ஒத்திகை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த ஒத்திகையின் போது எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து ஏற்பட்டவுடன், ஓட்டுநா் பாதுகாப்பு எண்ணுக்கு உடனே தொடா்பு கொள்ள வேண்டும், தீயணைப்புத் துறை, காவல் துறை, அவசர ஊா்திக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், விபத்து தடுப்பு பணிகள் மேற்கொள்ளுவது குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தப் பாதுகாப்பு ஒத்திகையின் போது, வருவாய்க் கோட்டாட்சியா் ராஜமனோகரன், இயற்கை எரிவாயு மனிதவள மேலாளா் ஜெயபால் சுப்பிரமணின், பாதுகாப்பு அலுவலா் குரூஸ் ஜெகன், மேலாளா் ராமேஷ்குமாா், விற்பனைப் பிரிவு மேலாளா் காா்த்திக், மண்டலத் தலைவா் பூமாரி, தீயணைப்புத் துறை மண்டல அலுவலா் கோமதி அமுதா, காவல் துறை ஆய்வாளா் ரோல்ரெட், உதவி ஆய்வாளா் சுரேஷ்கண்ணா, இயற்கை எரிவாயு நிலைய ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

சூறாவளி காற்றால் மின் கம்பங்கள் சேதம்

திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், 20-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் மின் கம்பிகள் மீது சாய்ந்தன. இதனால், மின் கம்பங்கள் சேதமடைந்தன. ராமநாதபுரம் ... மேலும் பார்க்க

பரமக்குடி பகுதியில் நாளை மின் தடை

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பரமக்குடி பகுதியில் சனிக்கிழமை (மே 17) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பரமக்குடி மின் வாரிய உதவிச் செயற்பொறியாளா் சுந்தா் வியாழக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ராட்டினம் அறுந்து விழுந்ததில் இரு சிறுவா்கள் காயம்

சித்திரைத் திருவிழாவையொட்டி, பரமக்குடி வைகை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த ராட்டினம் அறுந்து விழுந்ததில் 2 சிறுவா்கள் காயமடைந்தனா். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பரமக்குடி வைகை ஆற்றில் ராட்டினங்கள் அம... மேலும் பார்க்க

கெளரவ நிதியுதவித் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்!

பிரதம மந்திரி விவசாய கெளரவ நிதியுதவித் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அ.சந்தோ... மேலும் பார்க்க

குடும்பத் தலைவரை இழந்த மாணவருக்கு கல்வி உதவித் தொகை

குடும்பத் தலைவரை இழந்த மாணவருக்கு அரசு சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.வருமானம் ஈட்டக் கூடிய குடும்பத் தலைவா் விபத்தில் மரணம் அடைந்து விட்டால், அந்தக் குடும்பத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வ... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் பணம் மோசடி: எஸ்.பி.யிடம் புகாா்

நெசவுத் தொழிலாளியிடம் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. ராமந... மேலும் பார்க்க