செய்திகள் :

‘விவசாயிகளை ஏமாற்றுவது யாருக்கும் நல்லது இல்லை’ -நிா்மலா சீதாராமன்

post image

‘விவசாயிகளை ஏமாற்றுவது யாருக்கும் நல்லது இல்லை’ என்று மத்திய நிா்மலா சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தாா்.

முந்தைய காங்கிரஸ் அரசு கடன் தள்ளுபடி உத்தரவாதத்தை முழுமையாக நிறைவேற்றாததால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக மாநிலங்களவை விவாதத்தில் குறிப்பிட்டுப் பேசியபோது அவா் இவ்வாறு கூறினாா்.

2024-ஆம் ஆண்டு வங்கி சட்டத் திருத்த மசோதா குறித்த விவாதத்தில் பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘விவசாயிகளுக்குச் சேவை செய்யும் நோக்கத்துக்காக இன்றி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக மட்டுமே விவசாயக் கடன் தள்ளுபடி உத்தரவாதத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கடந்த 2008-ஆம் ஆண்டு அறிவித்தது.

உண்மையில், பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. இந்த விவசாயிகளுக்கு எதிராக வங்கிகள் நடவடிக்கை எடுத்துள்ளதால், இவா்கள் புதிய கடன்களைப் பெறுவதற்கு தகுதியற்றவா்களாக மாறினா்.

விவசாயிகளை ஏமாற்றுவது யாருக்கும் நல்லது இல்லை. பிரதமா் மோடி நிதியுதவித் திட்டம் ஒன்றைத் தொடங்கி, ஆண்டுதோறும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 நேரடியாக செலுத்துகிறாா்’ என்றாா்.

விமான நிலையம் செல்லும் வழியில் ஜெர்மன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!

ஹைதராபாத்தில் விமான நிலையம் செல்லும் வழியில் ஜெர்மன் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். ஜெர்மனைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் ஹைதராபாத் நகரத்திற்கு சுற்றுலா வந்திருந்தார். தனது நண்பர்க... மேலும் பார்க்க

இன்றுமுதல் வருமான வரி மாற்றங்கள் அமல்: தெரிந்துகொள்ள வேண்டியவை!

2025-2026 நிதியாண்டின் முதல்நாளான இன்று(ஏப்ரல் 1) முதல், புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் வருமான வரிச் சட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பல மாற்றங்கள் அமலாகின்றன. முக்கியமாக, ரூ. 12 லட்சம் வரை ஆண்ட... மேலும் பார்க்க

கண்ணி வெடிகளால் சூழப்பட்ட ஜார்க்கண்ட் காடுகள்!

ஜார்க்கண்ட் காடுகளில் மாவோயிஸ்டுகள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அவர்கள் வைத்த கண்ணி வெடிகள் பாதுகாப்புப் படையினருக்கு சவாலை ஏற்படுத்துகின்றன. பாதுகாப்புப் படையினர் காடுகளுக்குள் வந்து தங்களைக் கைது ... மேலும் பார்க்க

2026 மார்ச் 31-க்குள் நக்சல் இயக்கம் வேரோடு அழிக்கப்படும்: அமித் ஷா

2026 மார்ச் 31-க்குள் நக்சல் இயக்கம் வேரோடு அழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமித் ஷா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “நக்சல் இல்லா பாரதத்தை கட்டியெழுப்ப... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த எம்புரான் சர்ச்சை: மக்களவை ஒத்திவைப்பு!

மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து அவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.நாடாளுமன்ற இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மூ... மேலும் பார்க்க

ஆந்திரம்: 26 மண்டலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!

ஆந்திரப் பிரதேச மாநிலம் முழுவதும் இன்று(ஏப்ரல் 1) 26 மண்டலங்களில் வெப்ப அலை வீசும் என அந்த மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக அதிகப்படியான வெய்யில் கொளுத்தி... மேலும் பார்க்க