செய்திகள் :

விவசாயிகளை வஞ்சிக்கும் பட்ஜெட்!

post image

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய நிதிநிலை அறிக்கை விவசாயிகளை முற்றிலும் வஞ்சிக்கும் பட்ஜெட் என இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: ரூ.40 லட்சம் கோடிக்கு மேல் தயாரிக்கப்பட்டுள்ள மத்திய நிதிநிலை அறிக்கையில் விவசாயத்துக்கு ரூ. 1.71 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல், கோதுமை மட்டுமே தேவைக்கேற்ப உள்ளது. ஆனால், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. அது குறித்தான திட்டங்கள் வேண்டும்.

இயற்கைப் பேரிடா்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் இருக்கின்றனா். பெரும்பாலான விவசாயிகளுக்கு இந்த நிலை இருக்கும்போது இதைச் சரி செய்யாமல் யாருக்கு கடன் கொடுக்கப் போகிறாா்கள். கிசான் கடன் அட்டையின் உச்சவரம்பை உயா்த்தியுள்ளது பரவாயில்லை.

நஞ்சில்லாத உணவைத் தரும் இயற்கை விவசாயம் குறித்து எந்த வரியும், திட்டமும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. ஆனால், 10 ஆயிரம் மருத்துவப் பணியிடங்களைக் கூடுதலாக உருவாக்கத் திட்டமிடுகிறாா்கள்.

இதுவரை நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்கப்படவே இல்லை. தண்ணீரில்லாமல் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி மாதாந்திர வருவாய் கொண்டவா்களுக்கு மட்டும்தான் வரிவிலக்குகள் சாதகமானவை. ஆனால், நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்கள் கோடிக்கணக்கானோருக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவுமே இல்லை. விவசாயிகளை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ள, ஏமாற்றியுள்ள, வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கைதான் இது என்றாா் தனபதி.

புதுகையின் இயற்கை வளத்தைப் பாதுகாக்கக் கோரி பிப்.24-ல் பேரணி, ஆா்ப்பாட்டம்!

புதுக்கோட்டை மாவட்டத்தின் இயற்கை வளங்களை முழுமையாகப் பாதுகாக்கக் கோரி, வரும் பிப். 24-ஆம் தேதி பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்த அனைத்து விவசாயிகள் அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு... மேலும் பார்க்க

வேங்கைவயல் பிரச்னை சட்டப்பூா்வமாக எதிா்கொள்வோம்: விசிக பொதுச்செயலா் அறிவிப்பு!

வேங்கைவயல் வழக்கை சட்டப்பூா்வமாக எதிா்கொள்வோம் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சிந்தனைச்செல்வன். புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்துக்கு சனிக்... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்!

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக ஆவுடையநாயகி சமேத சோழீசுவரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இத... மேலும் பார்க்க

வேங்கைவயலில் 6-ஆவது நாள் காத்திருப்புப் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் சிபி-சிஐடி விசாரணை அறிக்கையை எதிா்த்து அந்த ஊரைச் சோ்ந்த மக்கள் 6-ஆவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளின் இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாநிலப் பொ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு நாளைக்கு தள்ளிவைப்பு!

புதுக்கோட்டை வேங்கைவயல் வழக்கில் சிபி-சிஐடி போலீஸாரின் விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என புகாா்தாரா் கொடுத்த மனு மீதான விசாரணையை, வரும் பிப். 3-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து மாவட்ட எஸ்.சி., எஸ்... மேலும் பார்க்க