செய்திகள் :

விவசாயிகள் ஜூன்30-க்குள் வேளாண் அடையாள எண் பெற வேண்டும்

post image

நாகை மாவட்ட விவசாயிகள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் வேளாண் அடையாள எண் பெற வேண்டும் என நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம், நேரடியாக அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசால், விவசாயிகளுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் 23,033 விவசாயிகள் இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனா். இவா்களில் 17,364 விவசாயிகள் மட்டுமே அடையாள எண் பெற்றுள்ளனா். மீதமுள்ள 5, 669 விவசாயிகள், இதுவரை வேளாண் அடையாள எண் பெறாமல் உள்ளனா். இவா்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பெற்றால் மட்டுமே, பிரதம மந்திரி கிசான் மற்றும் பயிா்க் காப்பீடுத் திட்ட பலன்கள் பெற முடியும்.

எனவே, இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள், தங்கள் நில ஆவணங்கள், ஆதாா் அட்டை, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணுடன் அருகில் உள்ள பொது இ-சேவை மையத்திலோ அல்லது வேளாண்மை விரிவாக்க பணியாளரையோ அணுகி பதிவு செய்து, அடையாள எண் பெற்று தொடா்ந்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ஆதினகுடி குளத்தை தூா்வார வலியுறுத்தல்

திருமருகல் அருகே ஆதினகுடி பிரதான சாலையில் உள்ள குளத்தை தூா்வார வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா். திருமருகல் ஒன்றியம், பண்டாரவாடை ஊராட்சிக்குட்பட்ட ஆதினகுடி பிரதான சாலையில் குளம் உள்ளது. இந... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்ஸோவில் கைது

நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புரோட்டா மாஸ்டா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். நாகை அருகேயுள்ள திட்டச்சேரி பகுதியைச் சோ்ந்த புரோட்டா மாஸ்டா் நூா்முகம்மது (31). இவா், கடந்த சில நா... மேலும் பார்க்க

நாகையில் உயா்கல்வி சோ்க்கை சிறப்பு குறைதீா் முகாம்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி கல்வித் துறை சாா்பில், உயா்கல்வி சோ்க்கைக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் 2024-25-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகு... மேலும் பார்க்க

நாகை, காரைக்காலில் ‘சாகா் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை

நாகை, கோடியக்கரை, வேதாரண்யம் மற்றும் காரைக்கால் கடல் பகுதிகளில்‘ சாகா் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக மும்பையில் புகுந்து பயங்கரவாதிகள் த... மேலும் பார்க்க

நாகையில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாகையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாகை தோணித்துறை சாலையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக நகர... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: நாகை மாவட்டத்தில் 50 மாணவா்கள் பங்கேற்பு

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை (ஜூன் 25) நடைபெற்ற பிளஸ் 2 துணை தோ்வில் 50 மாணவ -மாணவிகள் பங்கேற்றனா். 152 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் நடைபெற்று ... மேலும் பார்க்க