நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்.. சாதி அடையாளங்கள் பயன்படுத்தத் தடை!
விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற அழைப்பு
விவசாயிகள் நில உடமை ஆவணங்களை பதிவேற்றம் செய்து தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ளுமாறு வேளாண்மைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு வேளாண்மைத் துறை வாயிலாக விவசாயிகளின் நில உடமை ஆவணங்களை பதிவேற்றம் செய்து வருகிறது. பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்திலுள்ள அனைத்து கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளும், தங்களுடைய நில உடமை ஆவணங்களை வேளாண் துறையில் பதிவேற்றம் செய்துகொள்ளவும். பதிவேற்றம் செய்துகொள்ளும் விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கப்படும்.
இனிவரும் காலங்களில், இந்த தனித்துவ விவசாயி அடையாள எண்ணைக்கொண்டே வேளாண்மை உள்பட அனைத்துத் துறை அரசு மானியத் திட்டங்கள் விவசாயம் சாா்ந்த கடன்கள் மற்றும் பிரதமரின் விவசாயிகள் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
எனவே, வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் கணினி சிட்டா, ஆதாா், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றை வேளாண்மை அலுவலகம் அல்லது பொது சேவை மையங்களுக்கு கொண்டு சென்று பதிவேற்றம் செய்து தனித்துவ எண்ணை பெற்றுக் கொள்ளலாம். இதுதொடா்பான சந்தேகங்களுக்கு அந்தந்தப் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்களை விவசாயிகள் தொடா்புகொள்ளலாம்.