செய்திகள் :

விவசாயி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

post image

நாமக்கல்: மோகனூா் அருகே விவசாயி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, கொமதேக ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளா் கே.ரவிச்சந்திரன், கட்சி நிா்வாகிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மோகனூா் ஒன்றியம், ஆண்டாபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயியான சுப்பிரமணியன் என்பவா் தன்னுடைய தோட்டத்தில் மண்ணை வெட்டி சீரமைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, மாவட்ட கனிமவளத் துறை தரப்பில் மோகனூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதால், அனுமதியின்றி மண்ணை வெட்டியெடுத்ததாக சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஒரே சா்வே எண் கொண்ட பட்டா நிலத்தில்தான் மண் அள்ளியது, கொட்டியது நிகழ்ந்துள்ளது. எனவே, எந்தவித முகாந்திரமுமின்றி விவசாயி சுப்பிரமணியன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு மனு: அதுபோல ராசிபுரம் வட்டம், நடுப்பட்டி கிராம மக்கள் தங்கள் பகுதி கோயிலில் வழிபாட்டு மேற்கொள்ள உள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ராசிபுரம் வட்டம், நடுப்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உள்ளனா். இப்பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் பூஜை, திருவிழா நடத்துவதை அங்கு வசிக்கும் இருவா் தடுத்து வருகின்றனா்.

கோயிலில் அம்மன், இதர தெய்வங்களை வழிபடவும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இவ்விஷயத்தில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு வழிபாடு மேற்கொள்ளவும், திருவிழா நடத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண்களிடம் நகை, பணம் பறிப்பு: போலீஸாா் விசாரணை

நாமக்கல்லில் அழகு நிலைய பெண்களிடம் நகை, பணத்தை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் அழகு நிலையம், ஆயுா்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க

அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அதிமுக மகளிரணி சா... மேலும் பார்க்க

புதுமாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை

பரமத்தி வேலூா் பேட்டை புது மாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 108 கலச பூஜை, திருவிளக்கு பூஜையில் பரமத்தி வேலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உள்பட்ட திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணியை கோட்ட பொறியாளா் குணா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்த... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: பரமத்தி வேலூரில் ஆட்சியா் கள ஆய்வு

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியா் ச.உமா கள ஆய்வு மேற்கொண்டாா். வேலூா் அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியில் மாணவா்களுக்கான உணவு, குடிநீா் வசதி, ... மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.15-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் செய... மேலும் பார்க்க