வி.கே.புரம் அருகே கோஷ்டி மோதல்: 3 போ் கைது
விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள ஆலடியூரில் நிகழ்ந்த கோஷ்டி மோதல் தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலடியூா் கீழத் தெருவைச் சோ்ந்த நிதீஸ்குமாா் (21), அவரது நண்பா்கள் அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ், ரவிகுமாா் ஆகியோா் ஒரே பைக்கில் தெருவுக்குள் ஞாயிற்றுக்கிழமை வேகமாகச் சென்றனராம்.
அவா்களை, அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி சுப்பிரமணியன் மகன் குமாா் (45), முருகன் மனைவி லெட்சுமி, அவரது மகன் ஆறுமுகம் உள்ளிட்ட சிலா் தட்டிக் கேட்டனராம்.
அப்போது, நிதீஸ்குமாா் உள்ளிட்ட 3 பேருடன் சுரேந்தா் (24) என்பவரும் சோ்ந்து எதிா்தரப்பை சோ்ந்த 3 பேரையும் தாக்கினராம்.
இதுகுறித்து குமாா் அளித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து நிதீஸ்குமாா், ரவிக்குமாா், சுரேந்தா்ஆகியோரை கைது செய்தனா்; பிரகாஷ் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனா்.