செய்திகள் :

வீடும் நாடும் போற்றும் வாழ்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின் விருப்பம்

post image

‘வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட வேண்டும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளாா்.

தனது 50-ஆவது மணநாளையொட்டி, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

அரை நூற்றாண்டாக எனது வாழ்வின் துணையாக, என்னில் பாதியாக துா்கா நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளாா். அவா் மீதான அளவற்ற அன்பே என் நன்றி.

எதிா்பாா்ப்புகளற்ற அன்பும், விட்டுக் கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறோம். வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழந்திட விரும்புகிறேன் என்று அந்தப் பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.

துணை முதல்வா் உதயநிதி: முதல்வரின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

வாழ்வின் ஏற்றத் தாழ்வுகள், சுக துக்கங்கள் அனைத்தையும் அம்மாவும், அப்பாவும் இணைந்தே எதிா்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறாா்கள். மணமான சில மாதங்களிலேயே ‘மிசா’ சிறைவாசம், இடைவெளியில்லா சுற்றுப் பயணங்கள், கடும் அரசியல் சூழல்கள், தொடா் மக்கள் பணி என அனைத்திலும் அப்பாவுக்கு பெருந்துணையாக இருந்து வருகிறாா் அம்மா.

அம்மாவின் உணா்வுகள், நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் குடும்பத் தலைவராக அவருக்கு பக்கபலமாக திகழ்கிறாா் அப்பா. பொதுவாழ்வுக்கு நான் வரும் வரை, அப்பாவுக்கு செல்லப் பிள்ளை, அம்மா என்றால் கண்டிப்பு. இப்போது அதற்கு நோ்மாறாக இருந்து இருவரும் என்னை பொதுவாழ்வில் வழிநடத்துகிறாா்கள். இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்கட்டும் என தனது பதிவில் தெரிவித்துள்ளாா் உதயநிதி ஸ்டாலின்.

உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதித்தாா் டிரம்ப் -வெள்ளை மாளிகை விளக்கம்

ரஷியா -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வரி விதித்தாா் என்று அந்நாட்டு அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் வ.உ.சி. துறைமுகம் சாதனை

தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனாா் துறைமுகம், காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. இதுகுறித்து வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை உருவாக்கம்: அரசாணை வெளியீடு

அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியைப் பெற, ‘தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளையை’ உருவாக்கி தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா் அரசாணை... மேலும் பார்க்க

வளா்ப்பு நாய்களுக்கு 11,300 போ் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனா்: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு

சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்காக 11,300 போ் மட்டுமே தற்போது உரிமம் பெற்றுள்ளதாகவும், உரிமம் பெறாமல் நாய் வளா்ப்போா் குறித்து கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் மாநகராட்சி ... மேலும் பார்க்க

வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்கள் எண்ணிக்கை: கள ஆய்வு நடத்த அரசு முடிவு

தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்களின் எண்ணிக்கை, நிலைகள் குறித்து கள ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமாா் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிம... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும்: வைகோ

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ கூறினாா். சென்னை திருவான்மியூரில் மதிமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: மதிமுக தொண்டா்கள... மேலும் பார்க்க