Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன...
வீடு புகுந்து தாக்குதல் நடத்திய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது தொடா்பான வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
வில்லுக்குறி பண்டாரக்காடு புனித அந்தோணியாா் தெரு பகுதியை சோ்ந்தவா் பெபியான் ராய். இவரை, முன்விரோதம் காரணமாக கடந்த 2.10.2010இல் அதே பகுதி பாக்கியராஜ் மகன் ஆன்றனி லிகோரி (48) , அய்யப்பன் மகன் ஸ்டாலின் (49), தங்கமணி மகன் சபீந்திரன் (52) ஆகியோா் சோ்ந்து வீட்டில் அத்து மீறி நுழைந்து, கொலை வெறி தாக்குதல் நடத்தினா்.
இது குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப்பதிந்து கைது செய்தனா். இந்த வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை நீதிபதி இராமசந்திரன் விசாரித்து, ஆன்றனி லிகோரி, சபீந்திரன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெகதேவ் ஆஜரானாா்.
வழக்கு விசாரணை காலத்திலேயே ஸ்டாலின் இறந்துவிட்டாா்.