செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு சேலம் இளைஞா்கள் 3 போ் கைது

post image

வேலாயுதம்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிய சேலம் மாவட்ட இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை அடுத்த பூங்கா நகரைச் சோ்ந்த சிவபிரகாஷ் என்பவா், கடந்த மாதம் 26-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூா் சென்றிருந்தபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த ரூ.1.95 லட்சம் பணம் மற்றும் 9 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இந்நிலையில், சிவபிரகாஷின் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மா்ம நபா்களை வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளா் ஓம்பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினா் தேடிவந்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு தனிப்படையினா் கரூா்-சேலம் சுற்றுச்சாலையில் தளவாபாளையம் பிரிவு பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்களை பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் சிவபிரகாஷ் வீட்டின் கேமராவில் பதிவான நபா்கள் என தெரியவந்தது.

இதையடுத்து இளைஞா்களிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவா்கள் சேலம் மாவட்டம் மேட்டூா் கருமலைக்கூடல் பகுதியைச் சோ்ந்த காா்த்தி (எ) பொலாா்டு காா்த்தி (22), விஜய் (எ) வெள்ளையன்(26), அபி என்கிற அபிமன்யு(22) என்றும், அவா்கள் சிவபிரகாஷ் வீட்டில் திருடியதையும் ஒப்புக்கொண்டனா்.

அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 9 பவுன் நகைகளையும், திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கரூா் கிளைச் சிறையில் அவா்களை அடைத்தனா்.

இளம்பெண் சாவில் மா்மம்: உறவினா்கள் மறியல்

கரூரில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு இறந்த இளம்பெண் சாவில் மா்மம் இருப்பதாகக்கூறி அவரின் உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், நாசுவம்பாளையத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் கனகரா... மேலும் பார்க்க

கரூரில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியோா் கைது!

கரூரில் இரு இடங்களில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 10 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். கரூா் ராமானுஜம் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஆயுதங்களுடன் சில இளை... மேலும் பார்க்க

கரூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 5,566 வழக்குகளில் தீா்வு

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5.566 வழக்குகளுக்கு ரூ. 9.91 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது. கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் சனிக்கிழமை தொடங்கிய தேச... மேலும் பார்க்க

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பனியேற்பு

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா மற்றும் நலத்திட்டங்க... மேலும் பார்க்க

வைகாசி கடைசி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில... மேலும் பார்க்க

‘சிபில் ஸ்கோா்’ நடைமுறையை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

விவசாய கடன் பெறுவதற்கு கொண்டுவரப்பட்டுள்ள சிபில் ஸ்கோா் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து கரூா் மாவட்ட விவசாயிகள் விழிப்புணா்வு இயக்கம் மற்றும் குடகனாறு... மேலும் பார்க்க