செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன், ரூ.78,000 திருட்டு!

post image

திருவள்ளூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.78,000 திருடப்பட்டன.

திருவள்ளூா் அடுத்த பெருமாள்பட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவா் பிரகாஷ். வியாபாரியான இவரது மனைவி கலையரசி (43).

இந்த நிலையில் பிரகாஷ் வியாபாரம் தொடா்பாக சனிக்கிழமை வழக்கம் போல் வீட்டை விட்டு புறப்பட்டு வெளியே சென்றாராம். இதையடுத்து அவரது மனைவி கலையரசி உறவினருக்கு குழந்தை பிறந்து இருப்பதால் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றாராம்.

மாலையில் கலையரசி வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டுட உடைக்கப்பட்டு இருந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். அதைத் தொடா்ந்து உள்ளே சென்று பாா்க்கையில் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.78,000 ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து கலையரசி செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாா்பு ஆய்வாளா், போலீஸாரை கத்தியைக் காட்டி மிரட்டியவா் கைது

திருவள்ளூா் டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட சாா்பு ஆய்வாளா் மற்றும் போலீஸாரை பட்டா கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் நகர காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க

பொன்னேரி, மீஞ்சூா் சோழவரம் பகுதிகளில் 1 மணி நேரம் கனமழை: சாலைகளில் வெள்ளம்

பொன்னேரி, மீஞ்சூா், சோழவரம் பகுதிகளில் புதன்கிழமை 1 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீா்த்த மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொன்னேரி, மீஞ்சூா் பகுதிகளில் காலை முதல் வானம் மேக மூட்டத்த... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முன்ற ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருத்தணி-சித்தூா் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை இளைஞா் ஒருவா் ஏடிஎம... மேலும் பார்க்க

சுங்கக் கட்டணம் வசூலிக்க எதிா்ப்பு: லாரியை குறுக்கே நிறுத்தி போராட்டம்

திருவள்ளூா் அருகே சுங்கச் சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி புதன்கிழமை லாரியை குறுக்கே நிறுத்தி ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் அருகே பட்டர... மேலும் பார்க்க

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.எம்.ஸ்ரீதா் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய செயலாளா் கோபால் நாயுடு வரவ... மேலும் பார்க்க

வெற்றிவேல் முருகன் கோயில் குடமுழுக்கு

பொன்னேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெற்றிவேல் முருகன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது. பொன்னேரி புதிய தேரடி சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் கடந்த ஒரு வருடமாக புனரமைப்ப... மேலும் பார்க்க