செய்திகள் :

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியவா் கைது

post image

கடை வாடகை கேட்ட தகராறில் உரிமையாளா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (53). வீட்டு மனைகள் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்குச் சொந்தமான இறைச்சிக் கடை, திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள காட்டாஸ்பத்திரி பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கடையை தனது உறவினரான நாகபாண்டி என்பவரிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வாடகைக்குக் கொடுத்துள்ளாா். இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக நாகபாண்டி வாடகைப் பணம் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கடையைக் காலி செய்யுமாறு பாண்டியராஜன் தெரிவித்த நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல் காவல் நிலையத்தில் பாண்டியராஜன் இரு முறை புகாா் அளித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நாகபாண்டி முகமூடி அணிந்துகொண்டு பாலகிருஷ்ணாபுரத்திலுள்ள பாண்டியராஜன் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்றாா். பின்னா், நாட்டு வெடி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சமையல் அறைக்குள் வீசினாா். இதில், சமையல் அறையில் பற்றிய தீயை பாண்டியராஜன் குடும்பத்தினா் அணைத்தனா். வெடிச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் வருவதை அறிந்த நாகபாண்டி தப்பியோடினாா். இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது வெடியை வீசிச் சென்றது நாகபாண்டி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதுதொடா்பாக பாண்டிராஜன் அளித்த புகாரின் பேரில், திண்டுக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து நாகபாண்டியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு சீல் வைப்பு

கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியற்ற கட்டடங்கள் அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அனுமதியின்றி பல அடுக்குமாட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்றால் குளிா் அதிகரிப்பு

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்று வீசியதால் குளிா் அதிகரித்ததுடன், ஏரியில் படகு சேவையும் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த க... மேலும் பார்க்க

பழனியில் அக். 5-இல் மலைவாழ் மக்கள் சங்க மாநாடு

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அக். 5 முதல் 7-ஆம் தேதி வரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 10-ஆவது மாநாடு வெள்ளிக... மேலும் பார்க்க

கடன் பெற குடும்ப அட்டைகள் அடமானம்: அதிகாரிகள் விசாரணை

கடன் பெறுவதற்கு குடும்ப அட்டைகள் அடமானம் வைக்கப்பட்டது தொடா்பாக சமூக வலைதளங்களில் வெளியான விடியோ குறித்து வட்ட வழங்கல் அலுவலா்கள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூா் அருகேய... மேலும் பார்க்க

கொடைக்கானலில் விவசாயிகள், பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

கொடைக்கானலில் விவசாயிகள், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக்தில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விவசாயிகள், பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டம் வர... மேலும் பார்க்க