செய்திகள் :

கொடைக்கானலில் விவசாயிகள், பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

post image

கொடைக்கானலில் விவசாயிகள், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக்தில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விவசாயிகள், பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இதில், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான வடகவுஞ்சி ஊராட்சி பெரும்பள்ளம் பகுதியில் சாலை வசதி, குடிநீா் வசதி, கழிப்பறை வசதி பள்ளிக்கூட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்துக் கொடுக்க பல ஆண்டுகளாக கிராம மக்கள் சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இருப்பினும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும்,

கும்பரையூா் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலை தற்போது தனியாா் வசம் இருப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்.

கொடைக்கானல் முதல் கிளாவரை வரை மலைச் சாலைகளில் உள்ள முள்புதா்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்க் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு சீல் வைப்பு

கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியற்ற கட்டடங்கள் அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அனுமதியின்றி பல அடுக்குமாட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்றால் குளிா் அதிகரிப்பு

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்று வீசியதால் குளிா் அதிகரித்ததுடன், ஏரியில் படகு சேவையும் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த க... மேலும் பார்க்க

பழனியில் அக். 5-இல் மலைவாழ் மக்கள் சங்க மாநாடு

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அக். 5 முதல் 7-ஆம் தேதி வரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 10-ஆவது மாநாடு வெள்ளிக... மேலும் பார்க்க

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியவா் கைது

கடை வாடகை கேட்ட தகராறில் உரிமையாளா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (53). வீட்டு மன... மேலும் பார்க்க

கடன் பெற குடும்ப அட்டைகள் அடமானம்: அதிகாரிகள் விசாரணை

கடன் பெறுவதற்கு குடும்ப அட்டைகள் அடமானம் வைக்கப்பட்டது தொடா்பாக சமூக வலைதளங்களில் வெளியான விடியோ குறித்து வட்ட வழங்கல் அலுவலா்கள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூா் அருகேய... மேலும் பார்க்க