செய்திகள் :

கடன் பெற குடும்ப அட்டைகள் அடமானம்: அதிகாரிகள் விசாரணை

post image

கடன் பெறுவதற்கு குடும்ப அட்டைகள் அடமானம் வைக்கப்பட்டது தொடா்பாக சமூக வலைதளங்களில் வெளியான விடியோ குறித்து வட்ட வழங்கல் அலுவலா்கள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூா் அருகேயுள்ள பூச்சிநாயக்கன்பட்டியில் இரண்டு நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நியாய விலைக் கடையில் பெண் ஒருவா் 20-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளை வைத்தபடி, சம்பந்தப்பட்ட பயனாளிகளை அழைத்து பொருள்கள் வாங்குவதற்காக கைரேகைப் பதிவு செய்வது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. தொடா்ந்து பயனாளிகளுக்குக் கிடைக்க வேண்டிய இலவச அரிசி, கோதுமை, சா்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்டப் பொருள்களை அந்தப் பெண்ணே வாங்கி வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. வாங்கிய கடனுக்காக குடும்ப அட்டைகளை, சம்பந்தப்பட்ட பயனாளிகள் அந்த பெண்ணிடம் அடமானம் வைத்திருப்பதாகவும் தெரிகிறது.

இந்த விடியோ குறித்து மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் மேற்கு வட்ட வழங்கல் அலுவலா் மூலம் உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

திண்டுக்கல்லில் கடன் வாங்கும் கூலித் தொழிலாளா்களிடம் குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெறும் வழக்கம் பல இடங்களில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அடமானம் வைத்த குடும்ப அட்டைகளை, நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. இதுகுறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு சீல் வைப்பு

கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியற்ற கட்டடங்கள் அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அனுமதியின்றி பல அடுக்குமாட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்றால் குளிா் அதிகரிப்பு

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்று வீசியதால் குளிா் அதிகரித்ததுடன், ஏரியில் படகு சேவையும் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த க... மேலும் பார்க்க

பழனியில் அக். 5-இல் மலைவாழ் மக்கள் சங்க மாநாடு

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அக். 5 முதல் 7-ஆம் தேதி வரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 10-ஆவது மாநாடு வெள்ளிக... மேலும் பார்க்க

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியவா் கைது

கடை வாடகை கேட்ட தகராறில் உரிமையாளா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (53). வீட்டு மன... மேலும் பார்க்க

கொடைக்கானலில் விவசாயிகள், பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

கொடைக்கானலில் விவசாயிகள், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக்தில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விவசாயிகள், பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டம் வர... மேலும் பார்க்க