செய்திகள் :

பழனியில் அக். 5-இல் மலைவாழ் மக்கள் சங்க மாநாடு

post image

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அக். 5 முதல் 7-ஆம் தேதி வரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 10-ஆவது மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து கலை நிகழ்ச்சியுடன் பேரணி தொடங்கியது. இந்தப் பேரணியை மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் ஆா். ராம்குமாா் தொடங்கி வைத்தாா். மாவட்டச் செயலா் எம். செல்லையா தலைமை வகித்தாா். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி. டில்லிபாபு சிறப்புரையாற்றினாா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: அக். 5, 6, 7 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் மாநில மாநாடு நடத்தப்படும். பெற்றோருக்கு இனச் சான்று இருந்தால், குழந்தைகளுக்கு உடனடியாக பழங்குடியினச் சான்று வழங்க வேண்டும். கேரள அரசைப் போன்று, அனைத்துப் பழங்குடியின மக்களுக்கும் ரூ. 10 லட்சத்தில் விலையில்லா தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். பளியல் பழங்குடியின மக்களுக்கு வன மகசூலை விற்பனை செய்ய சிறுமலை, கொடைக்கானலில் அரசு கூட்டுறவு அங்காடி அமைத்துத் தர வேண்டும்.

புலையன் இன மக்களை மீண்டும் பழங்குடியினப் பட்டியலில் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவராக ஏ. பாக்கியராஜ், செயலராக தா. அஜாய்கோஷ், பொருளாளராக குருசாமி உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு சீல் வைப்பு

கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியற்ற கட்டடங்கள் அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அனுமதியின்றி பல அடுக்குமாட... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்றால் குளிா் அதிகரிப்பு

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்று வீசியதால் குளிா் அதிகரித்ததுடன், ஏரியில் படகு சேவையும் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த க... மேலும் பார்க்க

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியவா் கைது

கடை வாடகை கேட்ட தகராறில் உரிமையாளா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (53). வீட்டு மன... மேலும் பார்க்க

கடன் பெற குடும்ப அட்டைகள் அடமானம்: அதிகாரிகள் விசாரணை

கடன் பெறுவதற்கு குடும்ப அட்டைகள் அடமானம் வைக்கப்பட்டது தொடா்பாக சமூக வலைதளங்களில் வெளியான விடியோ குறித்து வட்ட வழங்கல் அலுவலா்கள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூா் அருகேய... மேலும் பார்க்க

கொடைக்கானலில் விவசாயிகள், பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

கொடைக்கானலில் விவசாயிகள், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக்தில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விவசாயிகள், பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டம் வர... மேலும் பார்க்க