நடிகர் அஜித் குமாருடன் எப்போது இணைவீர்கள்? லோகேஷ் கனகராஜ் பதில்!
பழனியில் அக். 5-இல் மலைவாழ் மக்கள் சங்க மாநாடு
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அக். 5 முதல் 7-ஆம் தேதி வரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 10-ஆவது மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து கலை நிகழ்ச்சியுடன் பேரணி தொடங்கியது. இந்தப் பேரணியை மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் ஆா். ராம்குமாா் தொடங்கி வைத்தாா். மாவட்டச் செயலா் எம். செல்லையா தலைமை வகித்தாா். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி. டில்லிபாபு சிறப்புரையாற்றினாா்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: அக். 5, 6, 7 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் மாநில மாநாடு நடத்தப்படும். பெற்றோருக்கு இனச் சான்று இருந்தால், குழந்தைகளுக்கு உடனடியாக பழங்குடியினச் சான்று வழங்க வேண்டும். கேரள அரசைப் போன்று, அனைத்துப் பழங்குடியின மக்களுக்கும் ரூ. 10 லட்சத்தில் விலையில்லா தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். பளியல் பழங்குடியின மக்களுக்கு வன மகசூலை விற்பனை செய்ய சிறுமலை, கொடைக்கானலில் அரசு கூட்டுறவு அங்காடி அமைத்துத் தர வேண்டும்.
புலையன் இன மக்களை மீண்டும் பழங்குடியினப் பட்டியலில் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவராக ஏ. பாக்கியராஜ், செயலராக தா. அஜாய்கோஷ், பொருளாளராக குருசாமி உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.