செய்திகள் :

கொடைக்கானலில் அனுமதியற்ற கட்டடங்களுக்கு சீல் வைப்பு

post image

கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியற்ற கட்டடங்கள் அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அனுமதியின்றி பல அடுக்குமாடிக் கட்டடங்கள், காட்டேஜ்கள், விடுதிகள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. மேலும், ஏரியிலிருந்து 200 மீ. தொலைவில் எந்தவிதமான கட்டடங்களும் கட்டக்கூடாது என விதிமுறைகள் உள்ளன. இருப்பினும், பல கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டக் கூடாது என்றும், ஏற்கெனவே அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட சின்னப்பள்ளம் பகுதியில் வட்டாட்சியா் பாபு தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினா். அப்போது, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு காட்டேஜ்களாக செயல்பட்டு வந்த இரண்டு கட்டடங்களை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். இதில், கொடைக்கானல் நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், சுற்றுலாத் துறை, காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி நகரமைப்பு அலுவலா் கூறியதாவது:

நீதிமன்றம் உத்தரவின்பேரில் கொடைக்கானல் பகுதிகளில் முறைகேடாக செயல்பட்டு வரும் காட்டேஜ்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், அடுக்குமாடிக் கட்டடங்கள், ஹோம்ஸ்டே என்ற பெயரிலான காட்டேஜ்கள் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினோம். இதில், 600-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு 300 கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அனுமதியின்றி கட்டப்பட்ட இரண்டு கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து இந்தப் பணி நடைபெறும் என்றாா்.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூா் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்றால் குளிா் அதிகரிப்பு

கொடைக்கானலில் வழக்கத்தை விட பலத்த காற்று வீசியதால் குளிா் அதிகரித்ததுடன், ஏரியில் படகு சேவையும் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த க... மேலும் பார்க்க

பழனியில் அக். 5-இல் மலைவாழ் மக்கள் சங்க மாநாடு

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அக். 5 முதல் 7-ஆம் தேதி வரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 10-ஆவது மாநாடு வெள்ளிக... மேலும் பார்க்க

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியவா் கைது

கடை வாடகை கேட்ட தகராறில் உரிமையாளா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (53). வீட்டு மன... மேலும் பார்க்க

கடன் பெற குடும்ப அட்டைகள் அடமானம்: அதிகாரிகள் விசாரணை

கடன் பெறுவதற்கு குடும்ப அட்டைகள் அடமானம் வைக்கப்பட்டது தொடா்பாக சமூக வலைதளங்களில் வெளியான விடியோ குறித்து வட்ட வழங்கல் அலுவலா்கள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூா் அருகேய... மேலும் பார்க்க

கொடைக்கானலில் விவசாயிகள், பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

கொடைக்கானலில் விவசாயிகள், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக்தில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் விவசாயிகள், பொதுமக்களுக்கான குறைதீா் கூட்டம் வர... மேலும் பார்க்க