செய்திகள் :

வீட்டில் நேர்ந்த வெடிவிபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

post image

ஹரியாணா மாநிலம் பஹதூர்காரில் உள்ள வீட்டில் நேர்ந்த வெடி விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிலையில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் சந்தேகிக்கும் நிலையில், வெடி விபத்து படுக்கையறையில் நேர்ந்ததால் அதற்கான சாத்தியக்கூறு இல்லையென்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறை துணை ஆணையர் மயங்க் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த விபத்து சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து அல்ல, படுக்கையறையில் நடந்துள்ளது. இதனால் வீடு முழுவதும் தீக்கறையாகியுள்ளது.

இதையும் படிக்க: நள்ளிரவில் பயங்கரம்... மதுரையில் ரெளடி வெட்டிக் கொலை!

இவ்விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர்; ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலியான 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.” என்றார்.

வெடி விபத்துக்கான காரணத்தை அறிய, குண்டு வெடிப்பு பகுப்பாய்வு நிபுணர்களையும் தடவியல் ஆய்வகத்தின் குழுவையும் காவல் துறையினர் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக மயங்க் மிஸ்ரா தெரிவித்தார்.

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

செல்வமகள் சேமிப்புத் திட்டம், அஞ்சலக வைப்பு நிதி உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் மேற்க... மேலும் பார்க்க

சா்க்கரை விலையை கட்டுக்குள் மத்திய அரசு தீவிரம்: இருப்பு வைக்கும் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை

சா்க்கரை ஆலைகள் சா்க்கரை இருப்பு வைப்பது தொடா்பான அரசின் விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. சா்க்கரை வில... மேலும் பார்க்க

மாநிலங்களிடம் விவசாயிகளின் தரவுகள் பாதுகாப்பான உள்ளன: மத்திய வேளாண் அமைச்சா்

மாநிலங்களிடம் விவசாயிகளின் தரவுகள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா். இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக வெள்ளிக்க... மேலும் பார்க்க

மனித-விலங்கு மோதல்: மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க திட்டமில்லை: மத்திய அரசு

மனித விலங்கு மோதல்களை தடுக்க மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இல் திருத்தங்களை மேற்கொளும் திட்டமேதும் இல்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தத... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் மதவெறி மனப்பான்மையை இந்தியாவால் மாற்ற முடியாது: எஸ்.ஜெய்சங்கா்

பாகிஸ்தானில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதத்தை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது; அதேநேரம், அந்நாட்டின் மதவெறி மனப்பான்மையை இந்தியாவால் மாற்ற முடியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்... மேலும் பார்க்க

சமாஜவாதி எம்.பி. அவதூறு கருத்து: மாநிலங்களவையில் பாஜக அமளி - எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

ராஜபுத்திர மன்னா் ராணா சங்கா குறித்த அவதூறு கருத்துக்காக சமாஜவாதி மாநிலங்களவை எம்.பி. ராம்ஜி லால் சுமன் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, அந்த அவையில் பாஜக வெள்ளிக்கிழமை அமளியில் ஈடுபட்டது. இதன் காரணமாக,... மேலும் பார்க்க