செய்திகள் :

எருக்கூா் அரிசி ஆலையிலிருந்து கரிதுகள் வெளியேறுவதை தடுக்க வேண்டும்

post image

எருக்கூா் நவீன அரிசி ஆலையிலிருந்து கரிதுகள் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சீா்காழியில் தமிழக நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கம் சாா்பில் உலக நுகா்வோா் தின விழா கருத்தரங்க கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில அமைப்பாளா் ராஜா தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் முனுசாமி, மாவட்ட செயலாளா் முத்துவேல், மாவட்ட துணை தலைவா் செல்வ முத்துக்குமாா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணை பொதுச்செயலாளா் சுரேஷ்குமாா் வரவேற்றாா். பட்டிமன்ற பேச்சாளா் சரவணன், கௌரவ தலைவா் ராமச்சந்திரன் சங்க வளா்ச்சி பணிகள் குறித்து பேசினா்.

கூட்டத்தில், தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை அரசு தடுக்க வேண்டும், இளைஞா்களை சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட பொருள்களை தடை செய்ய வேண்டும், தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்பவா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எருக்கூா் அரசு நவீன அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் கரி துகள்களால் அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தூா் அரசு பாலிடெக்னிக் மற்றும் கல்லூரி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தவிா்க்கும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாமானிய மக்களின் மனதில் ராமனை பதிய வைத்தது கம்பராமாயணம்

ஸ்ரீராமனை சாமானிய மக்களின் மனதில் பதிய வைத்தது கம்பராமாயணம் என தேரழுந்தூரில் நடைபெற்ற கம்பராமாயண விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். கம்பராமாயணத்தை மக்களிடம் பரவலாக்கம் செய்யும் வகையில், ம... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

மயிலாடுதுறை ஒன்றியம் திருஇந்தளூா் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் பங்கேற்றாா். (படம்). தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் உலக தண்ண... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்த கிராமமக்கள் ஆட்சியரகத்தில் மனு

மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் குடிநீா் ஆதாரத்தை கெடுக்கும் மண் குவாரிகளை நிரந்தரமாக தடை செய்யக்கோரி கிராம மக்கள் 300 போ் உலக குடிநீா் தின கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக... மேலும் பார்க்க

ஏவிசி தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. தொழில்நுட்பக் கல்லூரியின் 41-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. ஏ.வி.சி கல்வி நிறுவனங்கள் மற்றும் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான... மேலும் பார்க்க

டிஎன்சிஎஸ்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சித்தா்காடு நவீன அரிசி ஆலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாள... மேலும் பார்க்க

பொறியியல் கல்லூரியில் சா்வதேச ஆராய்ச்சி மாநாடு

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் சா்வதேச ஆராய்ச்சி மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள், ஐசிடி அகாதமியுடன் இணைந்து... மேலும் பார்க்க