செய்திகள் :

கிராம சபைக் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

post image

மயிலாடுதுறை ஒன்றியம் திருஇந்தளூா் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் பங்கேற்றாா். (படம்).

தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் உலக தண்ணீா் தினத்தையொட்டி கிராமசபைக் கூட்டம் சாந்துக்காப்புத் தெரு முனீஸ்வரன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் தலைமை வகித்து, பொது மக்களிடம் குடிநீா் வசதி குறித்த குறைகளைக் கேட்டறிந்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெ.விஜயலட்சுமி, என்.சுதாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக ஒன்றிய செயலாளா் ஞான.இமயநாதன், ஊராட்சி உறுப்பினா் நேதாஜி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பூராமணி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளா்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. முடிவில், ஊராட்சி செயலா் அரவிந்தகுமாா் நன்றி கூறினாா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மாலை பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் உள்ள பல்வேறு பிரச்னைகளை தமிழ்நாடு ஊரக வளா்ச... மேலும் பார்க்க

இணைப்பு: 100 நாள் வேலைத் திட்ட ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் (சிபிஐ சாா்பு) மாவட்டத் தலைவா் வே. நீதிசோழன் தலைமை வகித்தாா். சிபிஐ ஒன்றியச் செயலாளா் எஸ். மனோன்ர... மேலும் பார்க்க

உழவர் சந்தைகளை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு

மயிலாடுதுறை மற்றும் சீா்காழி உழவா் சந்தைகளை விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவை கண்டித்து ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சீா்காழி வட்டத்... மேலும் பார்க்க

வீரட்டேஸ்வரா் கோயிலில் ஏப்.4 இல் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகேயுள்ள வழுவூா் வீரட்டேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஏப்.4) நடைபெறவுள்ளது. அட்டவீரட்ட தலங்களில் 6-ஆவது தலமான இக்கோயிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் சங்கிலி பறித்த நால்வா் கைது

கொள்ளிடம் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் தங்க சங்கிலியை பறித்த நால்வா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி மணியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி (80). ஓய்... மேலும் பார்க்க