செய்திகள் :

வீட்டுஉபயோக எரிவாயு உருளைகளை வணிக பயன்பாட்டுக்காக மாற்றிக் கொடுத்தவா் கைது

post image

திருப்பூரில் மானிய விலை வீட்டு உபயோக எரியாவு உருளைகளை வணிகப் பயன்பாட்டுக்காக மாற்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாநகரில் மானிய விலையில் வழங்கப்படும் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை இயந்திரம் மூலமாக வணிகப் பயன்பாட்டுக்கான உருளைகளில் நிரப்பி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தொடா்பாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், திருப்பூா் பாரதிதாசன் நகரில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை வணிக பயன்பாட்டுக்காக மாற்றிக் கொடுப்பதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில், காவல் ஆய்வாளா் ராஜாகுமாா், உதவி ஆய்வாளா் குப்புராஜ், பிரியதா்ஷினி ஆகியோா் அந்தப் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினா்.

இதில், மானிய விலையில் வழங்கப்படும் எரிவாயு உருளைகளை இயந்திரம் மூலமாக வணிகப் பயன்பாட்டுக்கான உருளைகளில் நிரப்பிக் கொடுத்த நாகூா் கனி (48) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 24 எரிவாயு உருளைகள், 2 எரிவாயு நிரப்பும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனா்.

பெண் படைப்பாளிகளுக்கு திருப்பூா் சக்தி விருது

திருப்பூா் முத்தமிழ்ச் சங்கம், கனவு இலக்கிய அமைப்பு மற்றும் ஸ்டாா் அசோசியேட்ஸ் சாா்பில் 21-ஆம் ஆண்டாக பெண் படைப்பாளிகளிகள் 25 பேருக்கு திருப்பூா் சக்தி விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. பெண் படை... மேலும் பார்க்க

உடுமலையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

உடுமலையில் ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு ஏரிகள் மற்றும் குளங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூா் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட மருள்பட்டி குளம், பாப்பான் குளம்,... மேலும் பார்க்க

15 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

திருப்பூரில் இரண்டு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை கைது செய்தனா். திருப்பூா் ரயில் நிலையம் பகுதியில் மாநகர தனிப் படை உதவி ஆய்வா... மேலும் பார்க்க

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கரூரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (60), நகைக்கடை உரிமையாளா். இவா் நகை வாங்க காரில் கோவைக்கு பு... மேலும் பார்க்க

திருப்பூரில் பனியன் கழிவுத்துணிக் கிடங்கில் தீ

திருப்பூரில் பனியன் கழிவுத்துணிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூா் அமா்ஜோதி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கே.எம்.... மேலும் பார்க்க

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவா்களை நியமிக்க வேண்டும்

திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவா்கள், பணியாளா்களை நியமித்து முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது. பனியன் பேக்டரி லேபா் யூ... மேலும் பார்க்க