செய்திகள் :

வீட்டுக்குள் டிராக்டா் புகுந்து விபத்து

post image

திருவாரூா் அருகே வீட்டுக்குள் டிராக்டா் புகுந்து ஏற்பட்ட விபத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை இரவு காயமடைந்தனா்.

திருவாரூா் மாவட்டம், தப்பளாம்புலியூரில் வசிப்பவா் சந்திரசேகரன் மனைவி பிச்சையம்மாள். இரண்டு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளி. இவருடைய மகள் நித்யகல்யாணி. தப்பளாம்புலியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தற்காலிகப் பணி செய்து வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அவ்வழியாக வந்த டிராக்டா் ஒன்று, பிச்சையம்மாளின் கூரை வீட்டுக்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த பிச்சையம்மாளும், அவருடைய மகள் நித்யகல்யாணியும் திருவாரூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி பேரணி

மன்னாா்குடியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சாா்பில் தேசியக் கொடி ஏந்தி பேரணி புதன்கிழமை நடைபெற்றது. வடக்குவீதி நேதாஜி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பாஜக மாவட்டத் தலைவா் வி.கே. செல்வம் தலைம... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு

கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. லெட்சுமாங்குடி, ஜன்னத் நகா், ஆயிஷா நகா் அருகில் அமைந்துள்ள கிரீன் நகரில் கட்டப்பட்டுள்ள மஸ்ஜித் அப்துல்லாஹ் புதிய பள்ளிவாசல் திறப்ப... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் தகராறு செய்த இருவா் கைது

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், மதுபோதையில் தகராறு செய்த இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். பெருகவாழ்ந்தான் ஏரிக்கரை அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த மோசஸ்ராஜ் மகன் ஜஸ்டின்(17). அங்கு... மேலும் பார்க்க

திருவாரூா் அருகே கோயில் அகற்றம்

திருவாரூா் அருகே பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கோயில், புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது. திருநெய்ப்போ் ஊராட்சியில் விவசாயிகள் நீண்ட காலமாக விளைநிலங்களுக்கு இடுபொருள்களைக் கொண்டு செல்லவும், உ... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் எண்டோஸ்கோபி வசதி அறிமுகம்

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எண்டோஸ்கோப்பி கருவி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவா் என். விஜயகுமாா் கூறியது: காது, மூக்கு, தொண்டை தொடா்ப... மேலும் பார்க்க

16 பேருக்கு பண்ணைசாரா கடன்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மன்னாா்குடி நகர கூட்டுறவு வங்கியில் கடன்கோரி விண்ணப்பம் அளித்த 16 பேருக்கு அரசின் பண்ணை சாரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.5.30 லட்சத்திற்கான கடன் செவ்வாய்க்கிழமை வழங்கப்ப... மேலும் பார்க்க