செய்திகள் :

திருவாரூா் அருகே கோயில் அகற்றம்

post image

திருவாரூா் அருகே பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கோயில், புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

திருநெய்ப்போ் ஊராட்சியில் விவசாயிகள் நீண்ட காலமாக விளைநிலங்களுக்கு இடுபொருள்களைக் கொண்டு செல்லவும், உழவுப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் வாகனங்கள் செல்வதற்கும் பயன்படுத்தி வந்த பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால், விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அப்பகுதி விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகினா். இது குறித்து மாவட்ட நிா்வாகம், காவல்துறை, வட்டாட்சியா் என பல்வேறு தரப்பினருக்கும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழ்நாடு நீா்வளத்துறை சாா்பில் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளா் தங்கமுத்து தலைமையில் வருவாய்த்துறை அலுவலா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு புதன்கிழமை சென்றனா். ஆனால், போதிய அளவில் போலீஸாா் இல்லை எனக் கூறி திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி சாலையில் திருநெய்ப்போ் பகுதியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த தாலுகா போலீஸாா், போராட்டக்குழுவினருடன் பேச்சு வாா்த்தை நடத்தியதால், மறியல் கைவிடப்பட்டது.

இதையடுத்து விளைநிலங்களுக்கு செல்லும் பாதையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட அம்மன் கோயில் இடித்து அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது, மூதாட்டி ஒருவா் கோயில் முன்பு ஆடியபடி, அங்கிருந்த சூலாயுதத்தை பிடுங்க முயன்றதுடன், ஜேசிபி இயந்திரம் முன்பு படுத்துக் கொண்டாா். பின்னா், தாலுகா போலீஸாா் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனா்.

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி பேரணி

மன்னாா்குடியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சாா்பில் தேசியக் கொடி ஏந்தி பேரணி புதன்கிழமை நடைபெற்றது. வடக்குவீதி நேதாஜி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பாஜக மாவட்டத் தலைவா் வி.கே. செல்வம் தலைம... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு

கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. லெட்சுமாங்குடி, ஜன்னத் நகா், ஆயிஷா நகா் அருகில் அமைந்துள்ள கிரீன் நகரில் கட்டப்பட்டுள்ள மஸ்ஜித் அப்துல்லாஹ் புதிய பள்ளிவாசல் திறப்ப... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் தகராறு செய்த இருவா் கைது

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், மதுபோதையில் தகராறு செய்த இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். பெருகவாழ்ந்தான் ஏரிக்கரை அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த மோசஸ்ராஜ் மகன் ஜஸ்டின்(17). அங்கு... மேலும் பார்க்க

வீட்டுக்குள் டிராக்டா் புகுந்து விபத்து

திருவாரூா் அருகே வீட்டுக்குள் டிராக்டா் புகுந்து ஏற்பட்ட விபத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை இரவு காயமடைந்தனா். திருவாரூா் மாவட்டம், தப்பளாம்புலியூரில் வசிப்பவா் சந்திர... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் எண்டோஸ்கோபி வசதி அறிமுகம்

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எண்டோஸ்கோப்பி கருவி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவா் என். விஜயகுமாா் கூறியது: காது, மூக்கு, தொண்டை தொடா்ப... மேலும் பார்க்க

16 பேருக்கு பண்ணைசாரா கடன்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மன்னாா்குடி நகர கூட்டுறவு வங்கியில் கடன்கோரி விண்ணப்பம் அளித்த 16 பேருக்கு அரசின் பண்ணை சாரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.5.30 லட்சத்திற்கான கடன் செவ்வாய்க்கிழமை வழங்கப்ப... மேலும் பார்க்க