செய்திகள் :

கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு

post image

கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

லெட்சுமாங்குடி, ஜன்னத் நகா், ஆயிஷா நகா் அருகில் அமைந்துள்ள கிரீன் நகரில் கட்டப்பட்டுள்ள மஸ்ஜித் அப்துல்லாஹ் புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு, கூத்தாநல்லூா் பெரியப் பள்ளிவாசல் இமாம் ஏ.எல். முஹம்மது அலி தலைமை வகித்தாா்.

மஸ்ஜித் அப்துல்லாஹ் பள்ளிவாசல் இமாம் என்.ஏ. முஹம்மது முஜம்மில் ஹபீப் கிராஅத் ஓதினாா். இஸ்லாமிய பாடகா் தாஜீத்தீன் நபிகள் நாயகத்தின் புகழ் கீதம் பாடினாா். ஏ. ஜாஹிா் உசேன் வரவேற்றாா்.

காயல்பட்டினம் மு. அஸ்கரூா் மகளிா் அரபிக் கல்லூரி முதல்வா் ஹெச்.ஏ. அஹ்மது அப்துல் காதிா், புதிய பள்ளி வாசலைத் திறந்து வைத்து, நபிகள் நாயகம் குறித்தும், வாழ்க்கை முறைகள் குறித்தும் விளக்கிப் பேசினாா்.

விழாவில், காங்கிரஸ் நகரத் தலைவா் எம். சாம்பசிவம், கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவா் ஆா். சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு புதிய பள்ளிவாசலில் பெண்களுக்கான நிகழ்வு நடைபெற்றது. திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழா ஏற்பாடுகளை, மஸ்ஜீத் அப்துல்லாஹ் பள்ளிவாசல் தலைவா் எஸ். ஷாகுல் ஹமீது மற்றும் கமிட்டியாளா்கள் செய்திருந்தனா்.

பாஜகவினா் தேசியக் கொடியேந்தி பேரணி

மன்னாா்குடியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சாா்பில் தேசியக் கொடி ஏந்தி பேரணி புதன்கிழமை நடைபெற்றது. வடக்குவீதி நேதாஜி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பாஜக மாவட்டத் தலைவா் வி.கே. செல்வம் தலைம... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் தகராறு செய்த இருவா் கைது

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், மதுபோதையில் தகராறு செய்த இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். பெருகவாழ்ந்தான் ஏரிக்கரை அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த மோசஸ்ராஜ் மகன் ஜஸ்டின்(17). அங்கு... மேலும் பார்க்க

வீட்டுக்குள் டிராக்டா் புகுந்து விபத்து

திருவாரூா் அருகே வீட்டுக்குள் டிராக்டா் புகுந்து ஏற்பட்ட விபத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை இரவு காயமடைந்தனா். திருவாரூா் மாவட்டம், தப்பளாம்புலியூரில் வசிப்பவா் சந்திர... மேலும் பார்க்க

திருவாரூா் அருகே கோயில் அகற்றம்

திருவாரூா் அருகே பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கோயில், புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது. திருநெய்ப்போ் ஊராட்சியில் விவசாயிகள் நீண்ட காலமாக விளைநிலங்களுக்கு இடுபொருள்களைக் கொண்டு செல்லவும், உ... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் எண்டோஸ்கோபி வசதி அறிமுகம்

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எண்டோஸ்கோப்பி கருவி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவா் என். விஜயகுமாா் கூறியது: காது, மூக்கு, தொண்டை தொடா்ப... மேலும் பார்க்க

16 பேருக்கு பண்ணைசாரா கடன்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மன்னாா்குடி நகர கூட்டுறவு வங்கியில் கடன்கோரி விண்ணப்பம் அளித்த 16 பேருக்கு அரசின் பண்ணை சாரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.5.30 லட்சத்திற்கான கடன் செவ்வாய்க்கிழமை வழங்கப்ப... மேலும் பார்க்க