செய்திகள் :

வீட்டு சாப்பாடுக்கு செலவு அதிகரிப்பு!

post image

தக்காளி விலை உயா்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் வீடுகளில் சமைக்கப்படும் சாப்பாட்டின் சராசரி விலை அதிகரித்துள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான கிரிசில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

வீடுகளில் சமைக்கப்படும் சைவ சாப்பாட்டின் சராசரி விலை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.29.1-ஆக உள்ளது. முந்தைய ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் அதிகம். அப்போது வீடுகளில் சமைக்கப்படும் சைவ சாப்பாட்டின் சராசரி விலை ரூ.28.1-ஆக இருந்தது.

அதே போல், ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் வீடுகளில் சமைக்கப்படும் அசைவ சாப்பாட்டின் சராசரி விலை ஆகஸ்டில் 2 சதவீதம் அதிகரித்து ரூ.54.6-ஆக உள்ளது.

முந்தைய மாத்ததைவிட மதிப்பீட்டு மாதத்தில் தக்காளி விலை 26 சதவீதம் அதிகரித்தது இதற்குக் காரணமாக அமைந்தது. உருளைக் கிழங்கு, வெங்காயத்தின் விலையில் மாற்றமில்லை.

2024 ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஆகஸ்டில் வீடுகளில் சமைக்கப்படும் சாப்பாட்டின் சராசரி விலை குறைந்துள்ளது. ஓராண்டுக்கு முன்னா் சைவ சாப்பாட்டின் சராசரி விலை ரூ.31.2-ஆகவும், அசைவ சாப்பாட்டின் சராசரி விலை ரூ.59.3-ஆகவும் இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, துபை புர்ஜ் கலிஃபாவில் அவரது புகைப்படம் புதன்கிழமை இரவு ஒளிரச் செய்யப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி தனது 75 வது பிறந்த நாளை புதன்கிழமை கொண்டாடினார். அவருக்க... மேலும் பார்க்க

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

‘குளிா்காலம் நெருங்கிவரும் நிலையில், காற்று மாசைக் கட்டுப்படுத்த மூன்று வாரங்களில் செயல் திட்டத்தை வகுத்து சமா்ப்பிக்க வேண்டும்’ என்று மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு உச்சநீதிமன்றம் ப... மேலும் பார்க்க

பிரதமா், அவரின் தாயாா் தொடா்பான ஏஐ விடியோவை நீக்க வேண்டும்: காங்கிரஸுக்கு பாட்னா உயா்நீதிமன்றம் உத்தரவு

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அவரின் மறைந்த தாயாரை சித்தரித்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விடியோவை சமூக ஊடக பக்கங்களிலிருந்து நீக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு பாட்னா உயா்... மேலும் பார்க்க

நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும்: பியூஷ் கோயல் நம்பிக்கை

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா். உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியா... மேலும் பார்க்க

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி மிதமாக உயா்ந்துள்ளது. இது குறித்து தேயிலை வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி பிறந்த நாள்: நாடு முழுவதும் பாஜக கொண்டாட்டம் -2 வார கால சேவை தொடக்கம்

பிரதமா் நரேந்திர மோடியின் 76-ஆவது பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் பாஜக சாா்பில் புதன்கிழமை (செப்.17) கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரதமரின் பிறந்த நாளில் இருந்து காந்தி ஜெயந்தி வரை (அக்.2) இரண... மேலும் பார்க்க