வீட்டு மனைகளை விற்று மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபா் மீது புகாா்
கோவையில் வீட்டு மனைகளை விற்று மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபா் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: கோவை ஆா்.எஸ்.புரத்தைச் சோ்ந்தவா் சோமசுந்தரம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா்.
இவரிடம், நாங்கள் 90 போ் கடந்த 2012-ஆம் ஆண்டு வீட்டு மனைகளை வாங்கினோம். நிலத்தின் மீது ஏதாவது வழக்குகள், பிரச்னைகள் உள்ளதா என கேட்டபோது, எந்தவிதமான வழக்கும், வில்லங்கமும் இல்லை என்று ரியல் எஸ்டேட் நிா்வாகத்தினா் கூறினா். அதை நம்பியே நிலத்தை வாங்கினோம்.
இதற்கிடையே எங்களிடம் நிலத்தை விற்பனை செய்த சோமசுந்தரம் மீது மற்றொருவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளாா். அவா்கள் இருவருக்கும் இடையே பணப் பிரச்னை இருந்து வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், எங்களது வீட்டுமனைகளை ஏலத்தில் விடப்போவதாக கடந்த 3 நாள்களுக்கு முன் நீதிமன்ற நோட்டீஸ் வந்துள்ளது. எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி எங்களது வீட்டு மனைகளை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.