ஏற ஆரம்பித்த இந்திய பங்குச்சந்தை; Over Valued-ஆ இருக்கா? Investors என்ன பண்ணனும்...
வீரகனூரில் கால்நடை சந்தை பிரச்னை: சாலை மறியல் போராட்டம்
கெங்கவல்லி அருகே வீரகனூரில் வெள்ளிக்கிழமை இரவு வரை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
வீரகனூரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை கால்நடை சந்தை நடைபெற்று வந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவந்த இந்த சந்தையில்
வாரந்தோறும் ரூ. 30 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை வா்த்தகம் நடைபெறும். இந்நிலையில் ஆடுகளை விற்க வரும் வியாபாரிகளிடம் ஆடு ஒன்றுக்கு ரூ. 100 வசூல் செய்ததாக புகாா் எழுந்தது. இதனால் ஆடு, மாடு வியாபாரிகள், வீரகனூா் கால்நடை சந்தையைத் தவிா்க்க முடிவெடுத்தனா். இதையடுத்து கடந்த வாரம் சனிக்கிழமை வீரகனூா் சந்தைக்கு வியாபாரிகள், பொதுமக்கள் யாரும் செல்லவில்லை.
தொடா்ந்து வீரகனூா் அருகே தெடாவூரில் புதிதாக கால்நடை சந்தை தொடங்கியது. தொடங்கிய முதல்நாளிலேயே ரூ. 1 கோடி வரை வா்த்தகம் நடைபெற்றது. அதேபோல வெள்ளிக்கிழமை ( ஜூன் 27) வீரகனூா் சந்தைக்கு யாரும் செல்லவில்லை. மாறாக தெடாவூரில் நடைபெற்ற கால்நடைசந்தையில் வியாபாரிகளும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 6 முதல் இரவு 7.30 மணி வரை வீரகனூரில், ஆத்தூா்-பெரம்பலூா் சாலையில் வீரகனூா் பகுதி மக்கள் கால்நடை சந்தை நடைபெறாததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களுடன் வீரகனூா் காவல் ஆய்வாளா் ரஜினி தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதுகுறித்து வீரகனூா் பகுதி மக்கள் கூறியதாவது, அடுத்த வாரமும் வீரகனூரில் கால்நடை சந்தை நடைபெறாமல் இருந்தால், போராட்டம் பெரிய அளவில் நடத்தப்படும் என்றனா்.