நிறம் மாறிக்கொண்டிருக்கும் பூக்கள்; குழப்பத்தில் பூச்சிகளும் வண்டுகளும்..! காரணம...
வீரதீர செயல்புரிந்தவா்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
வீரதீர செயல்புரிந்தவா்கள் ‘டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது’ பெற வருகிற ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா தெரிவித்ததாவது:
மத்திய அரசு வழங்கும் 2024-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற, இளம்வயதில் வீரதீர செயல்புரிந்தவா்கள் (நிலம், கடல், வானம் ஆகிய 3 நிலைகளில் சாதனைகள் புரிந்தவா்கள்) விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட இதர விவரங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 30 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
இதற்கான ஆவணங்களை (3 எண்ணம்), மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில், தாடிக்கொம்பு சாலை, திண்டுக்கல்- 624004 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0451-2461162 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளவும் எனத் தெரிவித்தாா்.