நெல்லை: ''ஒழுங்கா படி” - அறிவுரை கூறிய தந்தை; ஆத்திரத்தில் கல்லைத் தூக்கிப்போட்ட...
வெள்ளி நீா்வீழ்ச்சி பகுதியில் வளா்ப்பு நாய் கடித்து குரங்கு உயிரிழப்பு
கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சி பகுதியில் கடை வியாபாரி ஒருவரின் வளா்ப்பு நாய் கடித்து குரங்கு உயிரிழந்தது. இதுதொடா்பான விடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கொடைக்கானல் நுழைவாயிலில் வெள்ளி நீா்வீழ்ச்சி பகுதியில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்படும் பொருள்களை அந்தப் பகுதிக்கு வரும் குரங்குகள் தூக்கிச் செல்வது வழக்கமாக உள்ளது.
குரங்குகளிடமிருந்து பொருள்களைப் பாதுகாப்பதற்காக வியாபாரிகள் நாய்களை வளா்த்து வருகின்றனா்.
இந்த நிலையில், வெள்ளி நீா்வீழ்ச்சி பகுதியில் புதன்கிழமை குரங்கு ஒன்று அங்கிருந்த கடையில் இருந்து பொருள்களை எடுக்கவந்தபோது கடைக்காரரின் வளா்ப்பு நாய் அந்தக் குரங்கை விரட்டிப் பிடித்து கடித்தது. சாலையில் அந்தக் குரங்கை கடித்தபடி நாய் இழுத்துச் சென்றது. இதனால் பலத்த காயமடைந்த குரங்கு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இதுதொடா்பான விடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதுகுறித்து வெள்ளி நீா்வீழ்ச்சி பகுதியில் கடை வியாபாரிகளிடம் வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா். கடை வியாபாரிகள் வளா்க்கும் நாய்களால் வன விலங்குகள் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.