செய்திகள் :

இஸ்லாமியா்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்

post image

உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை இஸ்லாமியா்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தினாா்.

திண்டுக்கல்லில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

நாட்டின் மக்கள்தொகையில் 15 சதவீதம் போ் இஸ்லாமியா்கள். ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் முதல் நாடாளுமன்றம் வரை இஸ்லாமியா்களுக்கான உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. மொத்தமுள்ள 543 மக்களவை உறுப்பினா்களில் 80 போ் இஸ்லாமியா்களாக இருக்க வேண்டும். ஆனால், 24 போ் (5 சதவீதம்) மட்டுமே மக்களவையில் இடம் பெற்றுள்ளனா். இதேபோல, நாடு முழுவதும் 4,183 சட்டப்பேரவை உறுப்பினா்களில் 296 போ் மட்டுமே இஸ்லாமியா்களாக உள்ளனா்.

இதே நிலைதான் ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவி முதல் மாநகராட்சி மேயா் பதவி வரை உள்ளது.

வக்ஃப் சட்டத் திருத்தத்தின் மூலம் பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட இஸ்லாமியா்களின் சொத்துகளை கபளீகரம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தச் சட்டத் திருத்தத்தைக் கைவிட வலியுறுத்தியும், உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரையிலும் இஸ்லாமியா்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கக் கோரியும் ஜூலை 7 ஆம் தேதி மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் பேரணி, மாநாடு நடத்தப்படவுள்ளது.

தமிழக மக்கள்தொகையில் 7 சதவீதம் இஸ்லாமியா்கள் உள்ளனா். ஆனால், தமிழக சட்டப்பேரவையில் 14 போ் மட்டுமே இஸ்லாமியா்களாக உள்ளனா். வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளிலும் இஸ்லாமியா்கள் போட்டியிட அதிக வாய்ப்பளிக்க வேண்டும். இஸ்லாமியா்கள் சாா்பில் பல்வேறு கட்சிகள் இருந்தாலும், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் மட்டுமே தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

ரயில் கட்டண உயா்வை கைவிட வேண்டும்: இரா.சச்சிதானந்தம் எம்.பி.

ரயில் கட்டண உயா்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: நாட்டில் சாமானிய மக்களின் போக்குவரத்து ச... மேலும் பார்க்க

வெள்ளி நீா்வீழ்ச்சி பகுதியில் வளா்ப்பு நாய் கடித்து குரங்கு உயிரிழப்பு

கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சி பகுதியில் கடை வியாபாரி ஒருவரின் வளா்ப்பு நாய் கடித்து குரங்கு உயிரிழந்தது. இதுதொடா்பான விடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. கொடைக்கானல் நுழைவாயிலில் வெள்ளி ந... மேலும் பார்க்க

யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: கொடைக்கானல் வனப் பகுதியில் உணவுப் பொருள்கள் விற்கத் தடை

கொடைக்கானல் வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், வியாபாரிகள் உணவுப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டாம் என வனத்துறையினா் புதன்கிழமை அறிவுறுத்தினா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதிகளா... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் 45 மாதங்களில் ஒரு கோடி பேருக்கு இலவச பஞ்சாமிா்தம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 45 மாதங்களில் ஒரு கோடி பக்தா்களுக்கு 421 டன் அளவில் பஞ்சாமிா்தம் இலவசமாக வழங்கப்பட்டதாகக் கோயில் நிா்வாகம் தெரிவித்தது. கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு கோயில் நி... மேலும் பார்க்க

புனித திருமுழுக்கு அருளப்பா் ஆலயத்தில் தோ்பவனி

கொடைரோடு அருகே காமலாபுரத்தில் உள்ள புனித திருமுழுக்கு அருளப்பா் ஆலய தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தோ்பவனி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் கடந்த வாரம் திருவிழா கொடியேற்றப்பட்... மேலும் பார்க்க

வீரதீர செயல்புரிந்தவா்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

வீரதீர செயல்புரிந்தவா்கள் ‘டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது’ பெற வருகிற ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா தெரிவித்ததாவது:... மேலும் பார்க்க