செய்திகள் :

வீரவநல்லூரில் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை: மருத்துவா் கைது

post image

வீரவநல்லூரில் உள்ள தனியாா் காப்பகத்தில் பயிற்சி பெற வந்த பிசியோதெரபி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், வீரவநல்லூா் அருகே இயங்கி வரும் பிரபல காப்பகத்தில், தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சோ்ந்த டேனியல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியின் இயன்முறை சிகிச்சை (பிசியோதெரபி) பிரிவில் பயிலும் 25க்கும் மேற்பட்ட மாணவிகள், 2 மாணவா்கள் அடங்கிய குழுவினா் பயிற்சி பெறுவதற்காக இந்தக் காப்பகத்துக்கு செப். 1-ஆம் தேதி வந்தனா்.

அப்போது பயிற்சியில் ஈடுபட்ட மாணவிக்கு மருத்துவா் டேனியல், பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அதிா்ச்சியடைந்த மாணவி, இதுகுறித்து சக மாணவிகளிடமும், தனது பெற்றோரிடமும் தெரிவித்தாா்.

இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து நடத்தி, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவா் டேனியலைக் கைது செய்தனா்.

நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு - சிதம்பரபுரம் இடையே நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. களக்காடு நகராட்சிக்குள்பட்டது சிதம்... மேலும் பார்க்க

களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். களக்காடு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், களக்காடு காவல் உ... மேலும் பார்க்க

மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது என்றாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மத்திய அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைத்திருக்கிறது. மத்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

களக்காட்டில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். களக்காடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கொலை முயற்சி, கொலை ம... மேலும் பார்க்க

வடவூா்பட்டி துா்கை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம், பிரான்சேரி அருகே வடவூா்பட்டியில் பட்டங்கட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பேச்சியம்மன் உடனுறை ஸ்ரீ துா்கை அம்மன் கோயிலில் வியாழக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்... மேலும் பார்க்க

கடையத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட மிளா

கடையம் பகுதியில் கால்வாயில் இறந்த நிலையில் கிடந்த 2 வயது ஆண் மிளா மீட்கப்பட்டது. கடையம் ராமநதி அணைக்குச் செல்லும் வழியில் உள்ள பொத்தையில் கரடி, மிளா, காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நி... மேலும் பார்க்க