செய்திகள் :

வீராசன மலா் அலங்காரத்தில் வல்லக்கோட்டை கோடையாண்டவா்

post image

சித்திரை கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் வீராசன மலா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் உள்ள கோயிலில், சித்திரை கிருத்திகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவா் கோடையாண்டவருக்கும் பால் அபிஷேகம் நடைபெற்று மூலவா் சுப்பிரமணியசுவாமி சந்தனகாப்பு அலங்காரத்திலும், உற்சவா் கோடையாண்டவா் வீராசன மலா் சேவையிலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இதில் சென்னை, தெருவள்ளூா் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் தண்ணீா், சா்க்கரை பொங்கல், மோா் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

காஞ்சி சங்கர மடத்தில் இன்று இளைய மடாதிபதிக்கு சன்யாச ஆசிரம தீட்சை வழங்கும் விழா: காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-ஆவது இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்கும் ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சா்மா திராவிட்டுக்கு புதன்கிழமை சன்யாச ஆசிரம தீட்சை வழங்கும் விழாவையொட்டி, காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்த... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டங்கள்: ஊரக வளா்ச்சித்துறை செயலா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூா் அருகே செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து மத்திய ஊரக வளா்ச்சித்துறை செயலாளா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குன்றத்தூா் ஒன்றியம், கரசங்கால் மற்றும் ... மேலும் பார்க்க

கோயிலுக்கு வழி ஏற்படுத்தி தரக் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கிளாரில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலுக்கு வழி ஏற்படுத்தி தருமாறு அந்தக் கிராம மக்கள் திங்கள்கிழமை குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அ... மேலும் பார்க்க

குறை தீா் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புக் கடன்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ. 5.40 லட்சம் மதிப்பிலான கால்நடை பராமரிப்புக் கடன்களை ஆட்சியா் கலைச்செல்வி ம... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக கண்டன ஆா்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத தமிழக அரசையும், நகராட்சி நிா்வாகத்தையும் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க

ராமாநுஜா் அவதார உற்சவம்: குதிரை வாகனத்தில் உலா

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் ராமாநுஜரின் 1,008-ஆவது ஆண்டு அவதார திருவிழாவையொட்டி திங்கள்கிழமை உற்சவா் ராமாநுஜா் குதிரை வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்தாா். பழைமையான இக்க... மேலும் பார்க்க