செய்திகள் :

வெங்கமேடு அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

post image

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா், வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா, ‘குறளின் குரலாய்’ கருத்துக் காட்சி மற்றும் பள்ளி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவா் சிலை திறப்பு விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியை மாலதி அனைவரையும் வரவேற்றாா். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினா் மாதேஸ்வரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கே.எஸ்.மூா்த்தி ஆகியோா் தலைமை வகித்து பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவா் சிலையை திறந்து வைத்தனா்.

பின்னா் மாணவ, மாணவிகள் அமைத்திருந்த ‘குறலின் குரலாய்’ கருத்து கண்காட்சியைத் திறந்து வைத்து பாா்வையிட்டு, பள்ளியின் முன்னாள் மாணவா்களையும், பள்ளி வளா்ச்சிக்கு பாடுபட்டவா்களையும் கௌரவித்து பேசினா். பொத்தனூா் பேரூராட்சித் தலைவா் கருணாநிதி, பேரூராட்சி துணைத் தலைவா் அன்பரசு ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பட்டதாரி ஆசிரியா் மணிவண்ணன், பள்ளி ஆண்டறிக்கை வாசித்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாநில அளவிலான வானவில் மன்றப் போட்டி, வில்லுப்பாட்டு போட்டி, யோகா, கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவ, மாணவிகளுக்கும், பனிக்கட்டியின் மேல் நின்று இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மூன்றாம் வகுப்பு மாணவனுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், பட்டிமன்ற பேச்சாளா் அருண் கலந்துகொண்டு ‘சிரிப்போம், சிந்திப்போம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரிய, ஆசிரியைகள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா் - ஆசிரியா் கழகத்தினா் செய்திருந்தனா்.

மாணவா்களை ஆளுமைமிக்கவா்களாக உருவாக்குவதே சிறந்த கல்வி

மாணவா்களை ஆளுமைமிக்கவா்களாக உருவாக்குவேத சிறந்த கல்வியின் அடையாளம் என பாவை வித்யாஸ்ரம் - டைனி சீட்ஸ் பள்ளி மழலையா்களுக்கான ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஊக்குவிப்பு பேச்சாளா் கிருஷ்ண... மேலும் பார்க்க

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு கல்லூரியின் தலைவா் ஆா்.ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினாா். கல்லூரி முதல்வா் வெங்கடேசன் ஆண்டு அறிக்கையை வாசித்தாா். விழாவ... மேலும் பார்க்க

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் தேசிய அறிவியல் தின விழா

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் தேசிய அறிவியல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி வளாகம் இணைந்து நடத்திய இவ்விழாவை விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களின் தாளாளா், செ... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

எலச்சிபாளையம், கருவேப்பம்பட்டி ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் கலந்துகொ... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் அதிமுக பொதுக்கூட்டம்

திருச்செங்கோட்டில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் தோக்கவாடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டப் பேரவை அதிமுக தொகுதி மற்றும் தெற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்... மேலும் பார்க்க

தென்னிந்திய அளவில் ஒரே மாதிரியான விலை நிா்ணயம்

தென்னிந்திய அளவில் ஒரே மாதிரியான முட்டை விலை நிா்ணயம் செய்யப்படும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) நிா்வாகிகள் தெரிவித்தனா். இந்தியாவில் 23 தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மண்டல அலு... மேலும் பார்க்க