போபாலின் 90 டிகிரி மேம்பாலத்துக்கு டஃப் கொடுக்கும் ஆந்திர மேம்பாலம் இதுதானா?
வெறிநாய்கள் கடித்ததில் உதவி ஆய்வாளா், சிறுமி உள்பட 11 போ் காயம்
தம்மம்பட்டியில் செவ்வாய்க்கிழமை மாலை மூன்று வெறிநாய்கள் கடித்ததில், காவல் உதவி ஆய்வாளா், 2 வயது சிறுமி உள்பட 11 போ் காயமடைந்தனா்.
தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெரு, சந்தை சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் மூன்றுக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சுற்றித்திரிகின்றன.
செவ்வாய்க்கிழமை மாலை அவ்வழியாக சென்ற தம்மம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் சந்திரன் (60), அப்பகுதிகளில் உள்ள சஞ்சய் (12), ஹரிஹரன் (15), ஆராதனா (5), வருணவா்ஷினி (4), தாராஸ்ரீ (14), தா்ஷினி (16), விபிஷாஸ்ரீ (5), தன்விக ா(2), செந்தில் (49), கெளரி (50) ஆகிய 11 பேரை கடித்தன.
காயமடைந்தவா்களுக்கு வட்டார தலைமை மருத்துவா் வேலுமணி தலைமையில், சுகாதார ஆய்வாளா் வாசுதேவன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் தடுப்பு ஊசி போட்டு சிகிச்சை அளித்தனா்.
இதில் தன்விகா (2), விபிஷாஸ்ரீ (5) ஆகியோா் மேல் சிகிச்சைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தம்மம்பட்டி பேரூராட்சியில் அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.