செய்திகள் :

வெற்றி பெறுவோம் என தொடர்ந்து நம்பிக்கையளித்த முகமது சிராஜ்; மனம் திறந்த ஆகாஷ் தீப்!

post image

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெறுவோம் என முகமது சிராஜ் தொடர்ந்து நம்பிக்கையளித்ததாக வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ஓவலில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெறுவோம் என முகமது சிராஜ் தொடர்ந்து நம்பிக்கையளித்ததாக வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் பேசியுள்ளார்.

akash deep
ஆகாஷ் தீப்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணிக்காக தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடிய முகமது சிராஜை உண்மையில் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். அணிக்காக அவர் எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். ஓவல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன் பின்னணியில் கடுமையான உழைப்பு இருக்கிறது.

ஓவல் டெஸ்ட்டில் முகமது சிராஜ் அவரது மிகச் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியதாகக் கூறமாட்டேன். அவர் பல போட்டிகளில் விளையாடியதை நான் பார்த்திருக்கிறேன். இதைவிட இன்னும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். ஓவல் டெஸ்ட்டில் வெற்றி பெற முடியும் என எங்களுக்கு தொடர்ச்சியாக அவர் நம்பிக்கையளித்தார். வெற்றி பெற முடியும் என்பதை நம்புமாறு அவர் எங்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தினார். விக்கெட் வீழ்த்த முடியும் என நம்பிக்கையளித்தார். வெற்றி பெறுவோமா என்பது உறுதியாக தெரியாதபோதும் முகமது சிராஜ் மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட்டார் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முகமது சிராஜ் முதலிடம் பிடித்தார். ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் அவர் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பின் ரோஹித், கோலி ஓய்வா? சௌரவ் கங்குலி பதில்!

Fast bowler Akash Deep has said that Mohammad Siraj has consistently assured him that they will win the final Test against England.

விரைவில் ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்; பேட்டிங் பயிற்சியைத் தொடங்கிய ரோஹித் சர்மா!

இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியுள்ளார்.ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கடந்த ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்... மேலும் பார்க்க

2025-இல் 195 ஸ்டிரைக் ரேட், 57 சராசரி... உச்சத்தில் இருக்கும் டிம் டேவிட்!

ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் இந்தாண்டு டி20 கிரிக்கெட்டில் தனது உச்சத்தில் விளையாடி வருகிறார். ஆஸி.யைச் சேர்ந்த 22 வயதாகும் டிம் டேவிட் மொத்தமாக 286 டி20 போட்டிகளில் 5,604 ரன்கள் குவித்துள்ளார். இந்தா... மேலும் பார்க்க

பொன்னான வாய்ப்பு..! சதமடித்த டெவால்டு பிரெவிஸ் பற்றி ஏபிடி!

சதமடித்த டெவால்டு பிரெவிஸ் பற்றி ஏபிடி பொன்னான வாய்ப்பை ஐபிஎல் அணிகள் தவறவிட்டது எனக் கூறியுள்ளார். தெனாப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான வீரர் டெவால்டு பிரெவிஸ். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20... மேலும் பார்க்க

ஆஸி.யின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி; தென்னாப்பிரிக்கா அபாரம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 போட்டி டார்வினில் இன்று (... மேலும் பார்க்க

ஐசிசி டி20 தவரிசை: தீப்தி சர்மா முன்னேற்றம்; ஸ்மிருதி மந்தனா சறுக்கல்!

சர்வதேச மகளிர் டி20 போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று (ஆகஸ்ட் 12) வெளியிட்டுள்ளது.ஐசிசி வெளியிட்டுள்ள டி20 போட்டிகளுக்கான இந்த தரவரிசையில் இந்திய அணியில் தீப்தி சர்மா பந்துவீச்சாளர்களில் இரண்டாம் இ... மேலும் பார்க்க

டி20களில் அதிக ரன்கள்... விராட் கோலியை முந்திய டேவிட் வார்னர்!

இந்திய வீரர் விராட் கோலியை டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து ஆஸி. வீரர் டேவிட் வார்னர் முந்தியுள்ளார். டேவிட் வார்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஜூன் 25, 2024-இல் தனது ஓய்வை அறிவித்தார். தற்போது, ... மேலும் பார்க்க