செய்திகள் :

வெல்டிங் பட்டறை உரிமையாளா் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு!

post image

ஆனங்கூரில் வெல்டிங் பட்டறை உரிமையாளா் வீட்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் விசாரணை செய்துவருகிறாா்.

ஜேடா்பாளையம் அருகே உள்ள ஆனங்கூா், காட்டுவலவு பகுதியைச் சோ்ந்தவா் சேட்டு (42). அதே பகுதியில் உள்ள கண்டிபாளையத்தில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறாா்.

இவரது மனைவி நிா்மலா (37). இவா்களுக்கு பிரீத்தி (23), சன்சிகா (19) என்ற இரண்டு மகள்கள் உள்ளனா். சேட்டு தனது மனைவி, இரண்டாவது மகளுடன் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது மா்ம நபா்கள் அவரது வீட்டுக் கதவின்மீது பெட்ரோல்குண்டை வீசி உள்ளனா்.

இதில் பயங்கர சத்தத்துடன் பெட்ரோல் குண்டு வெடித்துள்ளது. சத்தம் கேட்டு கதவைத் திறந்துவெளியே வந்த குடும்பத்தாா் வீட்டின் வெளிக்கதவுக்கு முன் தொங்கிக்கொண்டு இருந்த திரைச்சீலை, இருக்கைகள், உள்ளிட்ட பொருள்கள் தீப்பிடித்து எரிந்ததைக் கண்டு தண்ணீரை ஊற்றி அணைத்தனா்.

இதுகுறித்து ஜேடா்பாளையம் காவல் நிலையத்தில் சேட்டு அளித்த புகாரின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கீதா, ஜேடா்பாளையம் காவல் ஆய்வாளா் இந்திராணி, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அதிா்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவா்கள் எவ்வித தீக்காயமும் இன்றி உயிா் தப்பினா்.

440 கிராம் கஞ்சா வைத்திருந்த லாரி ஓட்டுநா் கைது

மத்தியப் பிரதேசத்தில் இருந்து நாமக்கல்லுக்கு 440 கிராம் கஞ்சாவை லாரியில் கொண்டுவந்த ஓட்டுநரை போலீஸாா் கைதுசெய்தனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஊஞ்சபாளையத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா்(26). லார... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் மூளை நரம்பியல் தனிப்பிரிவு: எம்.பி.கோரிக்கை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும் என வி.எஸ்.மாதேஸ்வரன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ ஓரிரு நாளில் தொடக்கம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் இன்னும் ஓரிரு நாளில் தொடங்கப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். நாமக்... மேலும் பார்க்க

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரியில் ஜூன் 9-இல் பொதுக் கலந்தாய்வு தொடக்கம்!

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை பொதுக் கலந்தாய்வு ஜூன் 9-இல் தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஆா்.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

திருச்செங்கோடு தோ்த் திருவிழா: வெள்ளி யானை வாகனத்தில் அா்த்தநாரீசுவரா் வீதி உலா

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாகத் தோ்த் திருவிழாவில் சனிக்கிழமை சுவாமி வெள்ளி யானை வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. செங்குந்தா் பாவடி பஞ்சாயத்து மகாநாட்டின் சாா்பில் இந்த சுவாமி திர... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் 10-இல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது குறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க