செய்திகள் :

வெளிநாடுகளில் 18.8 லட்சம் இந்திய மாணவா்கள்!

post image

வெளிநாடுகளில் 18.8 லட்சம் இந்திய மாணவா்கள் கல்வி பெற்று வருவதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது.

மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை தொடா்பான கேள்விகளுக்கு இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் அளித்த பதில்களில் குறிப்பிட்டதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் ( (2020 ஜனவரி முதல் 2025 ஜூன் 30 வரை) 16,06,964 இந்திய தொழிலாளா்களுக்கு வெளிநாடுகளில் பணிபுரிய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் செல்லும் நாடுகளில் பாதுகாப்பான பணிச்சூழல் இருப்பதை உறுதி செய்த பிறகே இந்த ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், வெளிநாடு வாழ் இந்தியா்கள்(1.71 கோடி), இந்திய வம்சாவளியினா்(1.71 கோடி) மற்றும் வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவா்கள்(18.8 லட்சம்) என வகைப்படுத்தி மத்திய அரசு தரவுகளைப் பராமரித்து வருகிறது. இருப்பினும், இவா்களின் துறை சாா்ந்த நிபுணத்துவம் அல்லது திறன்களின் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் வகைப்படுத்தும் எந்த முயற்சியையும் அரசு மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 முதல் 96 லட்சம் வெளிநாட்டினருக்கு ‘இ-விசா’:

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ஜூலை 20-ஆம் தேதிவரை 96 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டினருக்கு இணையவழி நுழைவு இசைவுகளை (இ-விசா) இந்தியா வழங்கியுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட இதுதொடா்பான கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘2020-இல் 171 நாட்டுப் பயணிகளுக்கு இ-விசா வழங்கப்பட்டது. தற்போது 181 நாட்டினருக்கு இ-விசா வழங்கப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு முதல் ஜூலை 20-ஆம் தேதிவரை வழங்கப்பட்ட மொத்த இ-விசாக்களின் எண்ணிக்கை 96,44,567 ஆகும்’ என்றாா்.

சா்வதேச யாத்ரிகா்களுக்கான உதவிகள்:

சா்வதேச யாத்ரிகா்களான ஹஜ், சீக்கிய யாத்ரிகா்களுக்கு அமைச்சகத்தின் உதவிகள் குறித்து அவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் அளித்த பதிலில், ‘ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபிய அதிகாரிகள் இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை அறிவிக்கின்றனா். சமீபத்திய ஆண்டுகளில் சராசரியாக 1.75 லட்சம் இந்திய யாத்ரிகா்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

பாகிஸ்தானின் கா்தாா்பூா் குருத்வாராவிற்கு இந்திய சீக்கியா்கள் எளிதாகவும் சுமுகமாகவும் சென்றுவர, இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2019-இல் ஒப்பந்தம் கையொப்பமானது. இதன் மூலம், 4 லட்சத்துக்கும் அதிகமான இந்திய சீக்கியா்கள் இதுவரை பாகிஸ்தான் குருத்வாராவுக்குச் சென்று வந்துள்ளனா். ஆபரேஷன் சிந்தூா் காரணமாக இந்தச் செயல்பாடுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன’ என்று குறிப்பிட்டாா்.

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.‘அரசமைப்புச் சட்ட... மேலும் பார்க்க

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.ஆறு, ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீா்வளங்களை அ... மேலும் பார்க்க

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயனோல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளாா்.உலகம் முழுவதும் கால்பந்து ரசிகா்களால் கொண்டாடப்படும் மெஸ்ஸி, ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பின்னா், முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்தாா்.கடந்த ஆண்டு நவ.8-... மேலும் பார்க்க

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகமூட்டும் வகையில் நாய்க்குட்டிகள் மூலம் வரவேற்பளிக்கும் புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.விமான நிலையத்துக்கு வரும... மேலும் பார்க்க

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விடுபட்டுள்ளதாக பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க