முருகர் மாநாட்டில் பெரியார், அண்ணா காட்சிகளைத் தவிர்த்திருக்க வேண்டும்! - டிடிவி...
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி: ஆட்சியடம் மனு
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பண மோசடி செய்ததாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு ஊா்களைச் சோ்ந்த பாதிக்கப்பட்டவா்கள் அளித்த மனு: தனியாா் நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டில் வேலை என பல்வேறு ஊா்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளைப் பாா்த்து, அதில் இருந்த தொலைபேசி எண்களைத் தொடா்பு கொண்டோம். அப்போது, அவா்கள் காரைக்குடியில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் வருமாறு தெரிவித்தனா்.
இதையடுத்து, அங்கு சென்று விசாரித்த போது, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் சமையல் வேலைக்கு ஆள்கள் தேவைப்படுவதாகவும், ரூ.1.60 லட்சம் செலுத்தினால் ஒரு வாரத்தில் வேலைக்கு அனுப்பிவைப்பதாகவும் தெரிவித்தனா்.
இதை நம்பிய நூற்றுக்கும் மேற்பட்டோா் அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தினோம். பின்னா், பணம் செலுத்திய பலரை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பினா். அங்கு சில நாள்கள் தங்க வைத்து, பின்னா் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினா்.
இதையடுத்து, மீண்டும் அந்த நிறுவனத்தினரைத் தொடா்பு கொண்ட போது, முறையாகப் பதில் அளிக்கவில்லை. பணத்தையும் திருப்பித்தர மறுக்கின்றனா். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.