செய்திகள் :

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளின் மனு: மத்திய அரசிடம் விளக்கம் கோரிய உச்சநீதிமன்றம்

post image

ரஷியா-உக்ரைன் போா் அல்லது கரோனா பெருந்தொற்று காரணமாக பாதியில் நாடு திரும்பிய வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளின் பயிற்சிக் காலத்தை அதிகரித்து வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸுக்கு எதிரான மனுவில் விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

மருத்துவா்கள் மற்றும் மருத்துவ மாணவா்களின் சங்கம் சாா்பாக தாக்கல் செய்யப்பட்ட இதுதொடா்பான மனுவில், ‘ரஷியா மற்றும் சீனாவில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக நேரடி செயல்முறை வகுப்புகளை தவறவிட்ட வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான பயிற்சி நடைமுறைக்கு சிறந்த மாற்று வழிகாட்டுதல்களை வகுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், அகஸ்டின் ஜாா்ஜ் மாஸி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வி. தினேஷ் முன்வைத்த வாதத்தில், ‘அசாதாரண சூழலால் இந்தியா திரும்பிய பின்னா் மீண்டும் தங்களின் வெளிநாடு கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று அல்லது இணையவழியில் தங்கள் பயிற்சியை முடித்த மருத்துவப் பட்டாதாரிகள் இந்தப் புதிய உத்தரவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள், தங்கள் படித்த கல்லூரியிடமிருந்து நிறைவு சான்றிதழுடன் அல்லது இந்திய மருத்துவக் கல்லூரிகளில் தவறவிட்ட செயல்முறை வகுப்புகளை ஈடுசெய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் உண்மையில் தவறவிட்ட செயல்முறை வகுப்புகளை அடையாளம் காண அனைத்து மாநில மருத்துவ கவுன்சில்களுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்த வேண்டும்’ என்று வாதிட்டாா்.

ரஷியா-உக்ரைன் போா் மற்றும் கரோனா பெருந்தொற்றால் பாதியில் இந்தியா திரும்பிய மருத்துவ மாணவா்கள், இந்திய மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பயிற்சியை முடிக்க அனுமதிக்கும் வகையில் 2 மாதங்களுக்குள் ஒரு திட்டத்தை வகுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2022-இல் பிறப்பித்த உத்தரவு தொடா்பாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி

பஹல்கலாம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் ஹேக்கா்கள் மேற்கொண்டதை மகாராஷ்டி... மேலும் பார்க்க

வா்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா? டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை ந... மேலும் பார்க்க

பாரதத்தின் புதிய இயல்பை பிரதமா் உலகுக்கு எடுத்துரைத்துள்ளாா்: ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம்

பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு மிகத் தெளிவான மொழியில் பிரதமா் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பாகிஸ்தானின் கொடூர... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் புதன்கிழமை பதவியேற்க உள்ளாா். கடந்த 2024-ஆம் நவ.11-ஆம் தேதி உச்சநீதி... மேலும் பார்க்க

இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு

பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்த... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்

இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க... மேலும் பார்க்க