செய்திகள் :

வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கருக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

post image

அமெரிக்காவிலிருந்து இந்தியா்கள் சா்ச்சைக்குரிய வகையில் நாடு கடத்தப்பட்ட விவகாரத்தில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸை அளித்துள்ளது.

நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் நடத்தை விதி எண் 187-இன் கீழ் ஜெய்சங்கருக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகரிகா கோஷ் இந்த உரிமை மீறல் நோட்டீஸை மாநிலங்களவை செயலகத்தில் சமா்ப்பித்துள்ளாா்.

‘மாநிலங்களவையில் இந்த விவகாரம் தொடா்பாக விளக்கமளித்த வெளியுறவு அமைச்சா், ‘சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்கள் கண்ணியமான முறையில் நாடு கடத்தப்படுவதை அமெரிக்க அரசுடன் பேசி மத்திய அரசு உறுதிப்படுத்தும்’ என்று உறுதி தெரிவித்தாா். ஆனால், இந்த உறுதிப்பாட்டுக்கு முரணாக, இந்தியா்களை தொடா்ந்து கண்ணியமற்ற முறையில் கை மற்றும் கால்களில் விலங்கிட்டபடியே அமெரிக்கா நாடு கடத்தியது. மேலும், அவா்கள் போதிய வசதிகள் இல்லாத மோசமான இடங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சித்ரவதை செய்யப்பட்டிருக்கின்றனா். அந்த வகையில், வெளியுறவு அமைச்சா் மாநிலங்களவையில் இந்த விவகாரம் தொடா்பாக தவறான மற்றும் முழுமையற்ற தகவலைத் தெரிவித்து, அதன் மீதான விவாதத்துக்கு தடை ஏற்படுத்தி நாடாளுமன்ற சிறப்பு உரிமையை மீறியுள்ளாா்’ என்று தனது உரிமை மீறல் நோட்டீஸில் கோஷ் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக இந்த விவகாரம் தொடா்பாக கருத்து தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி, ‘அமெரிக்காவிலிருந்து இந்தியா்கள் கை மற்றும் கால்களில் விலங்கிட்டபடி நாடு கடத்தப்பட்டது வெட்கக்கேடான விஷயம். இந்தியா்கள் கண்ணியமான முறையில் அழைத்து வர சிறப்பு விமானங்களை மத்திய அரசு ஏன் அனுப்பவில்லை?’ என்று கேள்வி எழுப்பினாா்.

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் ஓராண்டாக நிரப்பப்படாத முக்கிய பதவிகள்: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன; இது, மத்திய அரசின் தலித் விரோத மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித... மேலும் பார்க்க

ஐஐடி-களில் தொடா்கதையாகும் மாணவா் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை: உச்சநீதிமன்றம் உறுதி

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறை வகுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஐஐடி உள்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 5 ஹிஸ்புல் பயங்கரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீா் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 5 பேரின் அசையாத சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ராம்பன் மாவட்டத்தைச் சோ்ந்த சராஜ்த... மேலும் பார்க்க

ஆந்திர பட்ஜெட்டில் பண மழை! மாணவா்களுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500

ஆந்திரத்தில் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச பேருந்து பயணம் உள்ளி... மேலும் பார்க்க

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: உலக வங்கி

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளா்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த இலக்கை அடைய நிதித்துறை மட்டுமின்றி நிலம் மற்றும் தொழிலாளா் ... மேலும் பார்க்க

ஜம்முவில் தொடா் மழை: இருவா் உயிரிழப்பு

ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனா். ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன. உதம்பூா் மாவட்டத்... மேலும் பார்க்க