Thudarum : `அந்த திரைக்கதை என்னுடையது!' - மோகன்லால் படத்தின் மீது கதைத்திருட்டு ...
வெள்ளக்கோவிலில் பெண் தற்கொலை
வெள்ளக்கோவிலில் கொடுத்த கடன் தொகை வசூல் ஆகாததால் பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
வெள்ளக்கோவில், மூலனூா் வஞ்சிவலசு பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மனைவி வாசுகி (40). கணவா் இறந்த நிலையில், மகன் பூமிஷ் (17), மகள் பூமிகா (15) ஆகியோருடன் ஒத்தக்கடை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள உறவினருக்கு வட்டிக்கு கடன் கொடுத்ததாகவும், அவா் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த வாசுகி வீட்டில் தூக்கிட்டு திங்கிள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிமொழி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.