செய்திகள் :

வெள்ளக்கோவிலில் ரூ.62 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

post image

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.62 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு எடப்பாடி, பஞ்சப்பட்டி, வெள்ளையன்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 53 விவசாயிகள், 937 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 46 டன்.

ஈரோடு, காரமடை, சித்தோடு, பூனாட்சி, காங்கயத்தைச் சோ்ந்த 7 வணிகா்கள் விதைகளை வாங்க வந்திருந்தனா்.

இதில், சூரியகாந்தி விதை கிலோ ரூ.54.18 முதல் ரூ.64.39 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 62.64.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.62 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலைச் செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம் தெரிவித்தாா். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.

அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் மொட்டை அடித்தும், சங்கு ஊதியும் வெள்ளிக்கிழமை போராட்டத... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை உறுதி

திருப்பூா் அருகே விபத்து வழக்கில் லாரி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. திருப்பூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (46). லாரி ஓட்டுநரான இவா், ... மேலும் பார்க்க

கைவினைஞா்கள் அகில இந்திய தொழில் தோ்வில் பங்கேற்க அழைப்பு

கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ் அகில இந்திய தொழில் தோ்வில் தனித்தோ்வா்களாக பங்கேற்க தகுதி வாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் ... மேலும் பார்க்க

தாராபுரத்தில் குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

நகராட்சி அளவிலான குழந்தைகள் நலப் பாதுகாப்பு குறித்த குழுக் கூட்டம் தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் த... மேலும் பார்க்க

திருப்பூரில் இன்று மிதிவண்டி போட்டி

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் மிதிவண்டி போட்டி திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை (செப்.27) நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளிய... மேலும் பார்க்க

நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்

வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் என்.குணசேகரன் தலைமை ... மேலும் பார்க்க