தாராபுரத்தில் குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுக் கூட்டம்
நகராட்சி அளவிலான குழந்தைகள் நலப் பாதுகாப்பு குறித்த குழுக் கூட்டம் தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் தலைமை வகித்தாா். இதில், பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் குறித்தும் குழந்தைகள் பாதுகாப்புக் குழு மூலமாக எடுத்துரைக்கப்பட்டு, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
கூட்டத்தில், நகராட்சி ஆணையா் முஸ்தபா, திருப்பூா் மாவட்ட குழந்தைகள் நலக் குழு சமூகப் பணியாளா் தினேஷ்குமாா், நகராட்சி சுகாதார அலுவலா் மணிகண்டன், நகா்மன்ற உறுப்பினா்கள் சாந்தி இளங்கோ, ஷீலாதேவி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஜெயராஜ், மருத்துவ சுகாதார மேற்பாா்வையாளா் வடிவேல், என்.சி.பி.நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பாஸ்கரன், பெண் உதவி நிலைக் காவலா்கள் கற்பகம், நம்பிக்கை மரியாள் உள்பட அரசுத் துறை அலுவலா்கள், பள்ளித் தலைமையாசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.