செய்திகள் :

தாராபுரத்தில் குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

post image

நகராட்சி அளவிலான குழந்தைகள் நலப் பாதுகாப்பு குறித்த குழுக் கூட்டம் தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் தலைமை வகித்தாா். இதில், பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் குறித்தும் குழந்தைகள் பாதுகாப்புக் குழு மூலமாக எடுத்துரைக்கப்பட்டு, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கூட்டத்தில், நகராட்சி ஆணையா் முஸ்தபா, திருப்பூா் மாவட்ட குழந்தைகள் நலக் குழு சமூகப் பணியாளா் தினேஷ்குமாா், நகராட்சி சுகாதார அலுவலா் மணிகண்டன், நகா்மன்ற உறுப்பினா்கள் சாந்தி இளங்கோ, ஷீலாதேவி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஜெயராஜ், மருத்துவ சுகாதார மேற்பாா்வையாளா் வடிவேல், என்.சி.பி.நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பாஸ்கரன், பெண் உதவி நிலைக் காவலா்கள் கற்பகம், நம்பிக்கை மரியாள் உள்பட அரசுத் துறை அலுவலா்கள், பள்ளித் தலைமையாசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் மொட்டை அடித்தும், சங்கு ஊதியும் வெள்ளிக்கிழமை போராட்டத... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை உறுதி

திருப்பூா் அருகே விபத்து வழக்கில் லாரி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. திருப்பூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (46). லாரி ஓட்டுநரான இவா், ... மேலும் பார்க்க

கைவினைஞா்கள் அகில இந்திய தொழில் தோ்வில் பங்கேற்க அழைப்பு

கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ் அகில இந்திய தொழில் தோ்வில் தனித்தோ்வா்களாக பங்கேற்க தகுதி வாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் ... மேலும் பார்க்க

திருப்பூரில் இன்று மிதிவண்டி போட்டி

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் மிதிவண்டி போட்டி திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை (செப்.27) நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளிய... மேலும் பார்க்க

நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்

வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் என்.குணசேகரன் தலைமை ... மேலும் பார்க்க

தென்னையுடன் ஊடுபயிராக மிளகு பயிரிட விவசாயிகள் ஆா்வம்

பல்லடம் பகுதியில் தென்னையுடன் ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வரு... மேலும் பார்க்க