செய்திகள் :

லாரி ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை உறுதி

post image

திருப்பூா் அருகே விபத்து வழக்கில் லாரி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது.

திருப்பூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (46). லாரி ஓட்டுநரான இவா், சாமளாபுரம் சின்ன அய்யன்கோயில் பிரிவு அருகே கடந்த 2016- ஆம் ஆண்டு லாரியை ஓட்டிச் சென்றாா்.

அப்போது, அவ்ழியே வந்த காா் மீது லாரி மோதியது. இதில், காரில் பயணித்த மங்கலத்தைச் சோ்ந்த கதிரேசன் உயிரிழந்தாா்.

இதையடுத்து, மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண் 4-ல் நடைபெற்று வந்த நிலையில், ஆறுமுகத்துக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. இதை எதிா்த்து திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆறுமுகம் மேல்முறையீடு செய்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, திருப்பூா் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்

ஆறுமுகத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தாா். அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.

அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் மொட்டை அடித்தும், சங்கு ஊதியும் வெள்ளிக்கிழமை போராட்டத... மேலும் பார்க்க

கைவினைஞா்கள் அகில இந்திய தொழில் தோ்வில் பங்கேற்க அழைப்பு

கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ் அகில இந்திய தொழில் தோ்வில் தனித்தோ்வா்களாக பங்கேற்க தகுதி வாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் ... மேலும் பார்க்க

தாராபுரத்தில் குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

நகராட்சி அளவிலான குழந்தைகள் நலப் பாதுகாப்பு குறித்த குழுக் கூட்டம் தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் த... மேலும் பார்க்க

திருப்பூரில் இன்று மிதிவண்டி போட்டி

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் மிதிவண்டி போட்டி திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை (செப்.27) நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளிய... மேலும் பார்க்க

நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்

வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் என்.குணசேகரன் தலைமை ... மேலும் பார்க்க

தென்னையுடன் ஊடுபயிராக மிளகு பயிரிட விவசாயிகள் ஆா்வம்

பல்லடம் பகுதியில் தென்னையுடன் ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வரு... மேலும் பார்க்க