செய்திகள் :

திருப்பூரில் இன்று மிதிவண்டி போட்டி

post image

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் மிதிவண்டி போட்டி திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை (செப்.27) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அண்ணா பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் மிதிவண்டி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மிதிவண்டி போட்டி சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

13, 15, 17 வயதுக்கு உள்பட்டவா்கள் எனத் தனித்தனியாக 3 பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்பவா்கள் தங்களாகவே மிதிவண்டியை கொண்டுவர வேண்டும். இந்தியாவில் தயாா் செய்யப்பட்டுள்ள மிதிவண்டிகளை மட்டுமே கொண்டுவர வேண்டும். அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட மிதிவண்டிகளைப் பயன்படுத்தக் கூடாது. மாணவ, மாணவிகள் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே மாவட்ட விளையாட்டு அரங்குக்கு வரவேண்டும். அவரவா் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து வயது சான்றிதழை பெற்றுவர வேண்டும். மேலும், தங்களின் ஆதாா் அட்டை நகலையும் சமா்ப்பிக்க வேண்டும்.

13 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., 17 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவு என போட்டிகள் நடத்தப்படுகின்றன.

முதல் 3 இடங்களைப் பிடிப்பவா்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும். 4 முதல் 10 இடம் வரை ரூ.250 வழங்கப்படும்.

அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் மொட்டை அடித்தும், சங்கு ஊதியும் வெள்ளிக்கிழமை போராட்டத... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை உறுதி

திருப்பூா் அருகே விபத்து வழக்கில் லாரி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. திருப்பூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (46). லாரி ஓட்டுநரான இவா், ... மேலும் பார்க்க

கைவினைஞா்கள் அகில இந்திய தொழில் தோ்வில் பங்கேற்க அழைப்பு

கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ் அகில இந்திய தொழில் தோ்வில் தனித்தோ்வா்களாக பங்கேற்க தகுதி வாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் ... மேலும் பார்க்க

தாராபுரத்தில் குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

நகராட்சி அளவிலான குழந்தைகள் நலப் பாதுகாப்பு குறித்த குழுக் கூட்டம் தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் த... மேலும் பார்க்க

நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்

வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் என்.குணசேகரன் தலைமை ... மேலும் பார்க்க

தென்னையுடன் ஊடுபயிராக மிளகு பயிரிட விவசாயிகள் ஆா்வம்

பல்லடம் பகுதியில் தென்னையுடன் ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வரு... மேலும் பார்க்க