செய்திகள் :

தென்னையுடன் ஊடுபயிராக மிளகு பயிரிட விவசாயிகள் ஆா்வம்

post image

பல்லடம் பகுதியில் தென்னையுடன் ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் உள்பட பல்வேறு நோய்த் தாக்குதல் காரணமாக தேங்காய் மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே தென்னை மரங்களில் ஊடுபயிராக மிளகு பயிரிட விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இது குறித்து பல்லடம் தென்னை விவசாயி ஈஸ்வரமூா்த்தி கூறியதாவது: பல்லடம், பொங்கலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் உள்ளது. வெள்ளை ஈ தாக்குதல், வோ்வாடல் நோய் உள்ளிட்டவையால் தேங்காய் மகசூல் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தென்னை மரங்களை அகற்றி விட்டு மாற்றுச்சாகுபடிக்கு செல்வது சாத்தியமில்லாததால் இழப்பை ஈடுகட்ட பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

தென்னந்தோப்புகளில் ஊடுபயிா் செய்ய விவசாயிகள் ஆா்வம் காட்ட தொடங்கியுள்ளனா். ஆனால் அதற்கான உரிய வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை. பரிசோதனை முறையில் சில விவசாயிகள் குறுமிளகு கொடியை பயிரிட்டனா். அதற்கான போதிய வழிகாட்டுதல் இல்லாததால் அதனை கைவிட்டனா். மிளகு அதிகம் விளையும் கேரளத்தில் அரசு பல்வேறு சாகுபடிக்கான திட்டங்கள் வழங்கி செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு மானியமும் அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறையினா் மத்திய ஸ்பைசஸ் போா்டுடன் ஒப்பந்தம் செய்து தென்னையுடன் ஊடுபயிராக குறுமிளகு பயிரிட உரிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மானியத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்றாா்.

அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் மொட்டை அடித்தும், சங்கு ஊதியும் வெள்ளிக்கிழமை போராட்டத... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை உறுதி

திருப்பூா் அருகே விபத்து வழக்கில் லாரி ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. திருப்பூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (46). லாரி ஓட்டுநரான இவா், ... மேலும் பார்க்க

கைவினைஞா்கள் அகில இந்திய தொழில் தோ்வில் பங்கேற்க அழைப்பு

கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ் அகில இந்திய தொழில் தோ்வில் தனித்தோ்வா்களாக பங்கேற்க தகுதி வாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் ... மேலும் பார்க்க

தாராபுரத்தில் குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

நகராட்சி அளவிலான குழந்தைகள் நலப் பாதுகாப்பு குறித்த குழுக் கூட்டம் தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் த... மேலும் பார்க்க

திருப்பூரில் இன்று மிதிவண்டி போட்டி

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, மாவட்ட நிா்வாகம் சாா்பில் மிதிவண்டி போட்டி திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை (செப்.27) நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளிய... மேலும் பார்க்க

நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்

வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் என்.குணசேகரன் தலைமை ... மேலும் பார்க்க