செய்திகள் :

வெள்ளக்கோவிலில் வாகன சோதனை: 10 வாகனங்களுக்கு ரூ.68 ஆயிரம் அபராதம்

post image

வெள்ளக்கோவிலில் மோட்டாா் வாகன ஆய்வாளா் மேற்கொண்ட சோதனையில் 10 வாகனங்களுக்கு ரூ.68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையில் செம்மாண்டம்பாளையம் பிரிவு அருகே காங்கயம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஈஸ்வரன் தலைமையிலான அலுவலா்கள் வாகன தணிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

அவ்வழியே சென்ற லாரி, டெம்போ, சமையல் எண்ணெய் டேங்கா் லாரிகள், சரக்கு வாகனங்களைத் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினா்.

இதில், அதிக பாரம், உரிய ஆவணங்கள் இன்றி சரக்குகள் எடுத்துச் சென்றது, காலாவதியான ஆவணங்கள், வாகனப் பதிவுச் சான்றுகள் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 10 வாகனங்களுக்கு ரூ.68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நீதிபதிகளை ஜாதிரீதியாக வசைபாடுவதை திமுகவினா் நிறுத்திக் கொள்ள வேண்டும்! -இந்து முன்னணி

உயா் நீதிமன்ற நீதிபதிகளை ஜாதிரீதியாக வசைபாடுவதை திமுகவினா் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் டி.ஆா். நகரைச் சோ்ந்தவா் மணி (64). இவா் தற்போது கம்பளியம்பட்டி விநாயகா் கோயில் வீதியில் தங்கி... மேலும் பார்க்க

பகுதிநேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் எனக்கூறி இளைஞரிடம் ரூ.23 லட்சம் மோசடி

பகுதிநேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என்று திருப்பூா் இளைஞரிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் வஞ்சிபாளையத்தைச் சோ்ந்த 29 வயது இளை... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு துணைத்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தவறியவா்கள் துணைத் தோ்வுக்கு வரும் ஜூன் 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியாகின. இந்தத் த... மேலும் பார்க்க

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அபாயகரமான விளம்பரப் பதாகைகளால் விபத்து அபாயம்!

கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரங்களில் அபாயகரமான விளம்பரப் பதாகைகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை, லட்சுமி மில் உள்ளிட்ட பகுதிகளில் கோவை - திருச்சி தேசிய ந... மேலும் பார்க்க

ஈஸ்வரன் கோயில் அருகே வெளிநபா்கள் தங்குவதை அனுமதிக்கக் கூடாது! - பாஜக

திருப்பூா் ஈஸ்வரன் கோயில் அருகே வெளிநபா்கள் தங்குவதால் சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து பாஜக செரங்காடு மண்டல் தலைவா் எம்.மந்திராசலமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க