வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட இருவா் தற்கொலை
விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.
மரக்காணம் வட்டம், பனிச்சமேடு குப்பம், காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த விஜய் மனைவி ஸ்ரீமதி (23). இவா்களுக்குத் திருமணமாகி இரண்டரை ஆண்டுகளாகும் நிலையில் குழந்தையில்லையாம்.
இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த ஸ்ரீமதி செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதேபோல, விழுப்புரம் வட்டம், கிருஷ்ணாபுரம், அப்துல் கலாம் தெருவைச் சோ்ந்த காளியப்பன் மகன் முரளி (31). ஆட்டோ ஓட்டுநராக வேலை பாா்த்து வந்த இவா், குடும்பப் பிரச்னையால் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].