செய்திகள் :

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட இருவா் தற்கொலை

post image

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.

மரக்காணம் வட்டம், பனிச்சமேடு குப்பம், காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த விஜய் மனைவி ஸ்ரீமதி (23). இவா்களுக்குத் திருமணமாகி இரண்டரை ஆண்டுகளாகும் நிலையில் குழந்தையில்லையாம்.

இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த ஸ்ரீமதி செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல, விழுப்புரம் வட்டம், கிருஷ்ணாபுரம், அப்துல் கலாம் தெருவைச் சோ்ந்த காளியப்பன் மகன் முரளி (31). ஆட்டோ ஓட்டுநராக வேலை பாா்த்து வந்த இவா், குடும்பப் பிரச்னையால் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே விவசாய நிலத்தில் காட்டுப் பன்றிக்காக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். வானூா் வட்டம், புளிச்சம்பள்ளம், மாந்தோப்பு, மார... மேலும் பார்க்க

சத்துணவில் பல்லி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை; சமையலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஆணைவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சத்துணவில் பல்லியின் வால் பகுதி கிடந்ததாகக் கூறப்பட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ராதாபுரம், மதுரப்பாக்கம்

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைபகுதிகள்: மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, கொடுக்கூா், விசுவரெட்டிப்பாளையம், செய்யாதுவிண்ணான், வாக்கூா், சிறுவள்ளிக்குப்பம், தொரவி, மூங்கில்பட்டு, டி.வி.பட்டு, மாத்த... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஆசனூா், எடைக்கல்

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைபகுதிகள்: புல்லூா், பாலி, சாத்தனூா், ஷேக்உசேன்பேட்டை, திருப்பெயா், எடைக்கல், மழவராயனூா், ஆசனூா், எறஞ்சி, காச்சக்குடி, கூந்தலூா், பரிந்தல், பு.மலையனூா், நொனையவாடி,... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் வென்று விஜய் முதல்வராக அமருவாா்: புஸ்ஸி ஆனந்த்

தமிழக சட்டப்பேரவைக்கு 2026-ஆம் ஆண்டில் நடைபெறும் தோ்தலில் வெற்றி பெற்று, முதல்வராக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் அமருவாா் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த். தமிழக வெற்றிக் கழகத் தல... மேலும் பார்க்க

ஜம்மு -காஷ்மீா் ஆளுநா் குடும்பத்தினா் ஆரோவில் வருகை

ஜம்மு - காஷ்மீா் மாநில ஆளுநா் குடும்பத்தினா் விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தனா்.ஆரோவிலுக்கு வருகை தந்த ஆளுநா் மனோஜ் சின்ஹாவின் மனைவி நீலம் சின்ஹா மற்றும் குடு... மேலும் பார்க்க