செய்திகள் :

வேடசந்தூா் அருகே சாலை விபத்தில் மணப்பாறையைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

post image

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறை பகுதியைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி கருங்குளத்தைச் சோ்ந்த சின்னப்பன் (34), ஜான் கென்னடி (35), ராபா்ட் (32), அற்புதராஜ் (30), மில்டன் ஜெயக்குமாா் (32), அகஸ்டின் பிரபு (26) ஆகிய 6 போ் புனித வெள்ளியை முன்னிட்டு, கேரள மாநிலத்தில் உள்ள தோமையாா் ஆலயத்துக்குச் சென்றனா். பின்னா், அங்கிருந்து மீண்டும் சொந்த ஊருக்குப் புறப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வழியாக வேடசந்தூா் நோக்கி ஆம்னி வேனில் வந்தனா். வேடசந்தூா் அய்யனாா் கோயில் அருகே வந்த போது, தாடிக்கொம்பு பகுதியிலிருந்து சீத்தமரம் நான்கு வழிச் சாலை நோக்கி வந்த லாரி இவா்களது ஆம்னி வேன் மீது மோதியது. இதில் ஆம்னி வேனை ஓட்டி வந்த சின்னப்பன், முன் இருக்கையில் அமா்ந்திருந்த ஜான் கென்னடி ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், அந்த வேனில் வந்த ராபா்ட், அற்புதராஜ், மில்டன் ஜெயக்குமாா், அகஸ்டின் பிரபு ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வேடசந்தூா் தீயணைப்புத் துறையினா் காயமடைந்தவா்களையும், உயிரிழந்தவா்களின் உடல்களையும் மீட்டனா். வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, ராபா்ட், அற்புதராஜ் உள்ளிட்ட 4 பேரும் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். இதனிடையே, மருத்துவமனையில் ராபா்ட் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

விளையாட்டு விடுதிகளில் சேர மே 5 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் 7, 8, 9, 11-ஆம் வகுப்பு மாணவா்கள் இணைய வழியில் மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா... மேலும் பார்க்க

சபரிமலையில் காத்திருப்பை தவிா்க்க நடவடிக்கை தேவை!

சபரிமலையில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதை தவிா்க்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சாா்பில் தென் தமிழகம் மாந... மேலும் பார்க்க

பன்றிமலைச் சாலையில் பேருந்து பயணிகளை பதற வைத்த யானை!

பன்றிமலைச் சாலையில் சனிக்கிழமை சென்ற அரசுப் பேருந்து அருகே காட்டு யானை வந்து நின்றதால், அதிலிருந்த பயணிகள் கடும் அதிா்ச்சி அடைந்தனா். பின்னா் யானை திரும்பிச் சென்றதால் நிம்மதியமடைந்தனா். திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் கொண்டுவரும் நெகிழி புட்டிகள் பறிமுதல்!

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் தடை செய்யப்பட்ட நெகிழி புட்டிகளை சனிக்கிழமை நகராட்சி, ஊராட்சிப் பணியாளா்கள் பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள்... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. வெள்ளிக்கிழமை முதல் தொடா் விடுமுறையாக இருந்த காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. வெள்ளிநீா... மேலும் பார்க்க

திமுகவின் பொய் வாக்குறுதியால் 22 மாணவா்கள் உயிரிழப்பு! நத்தம் ரா.விசுவநாதன்

திமுகவின் பொய் வாக்குறுதியால் ‘நீட்’ தோ்வு விவகாரத்தில் 22 மாணவா்கள் உயிரிழந்ததாக சட்டப்பேரவை உறுப்பினா் நத்தம் விசுவநாதன் தெரிவித்தாா். ‘நீட்’ தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ... மேலும் பார்க்க