செய்திகள் :

வேதாரண்யம் பகுதியில் மீண்டும் இடியுடன் கூடிய கனமழை

post image

வேதாரண்யம் பகுதியில் மீண்டும் இடியுடன் கூடிய மழை வெள்ளிக்கிழமை இரவில் இருந்து பெய்தது. வேதாரண்யம் தெற்கு கடலோரப் பகுதியில் மே 16-ஆம் தேதி தொடங்கி மே 20-ஆம் தேதி வரை அவ்வப்போது மழை பெய்து புஞ்சை பருவ சாகுபடி மற்றும் உப்பு உற்பத்தி பணியை பாதிக்க செய்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் தென்மேற்கு திசையில் இருந்து வீசிய பலத்த சூறைக்காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. சனிக்கிழமை காலை 8:30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 58.4, தலைஞாயிறில் 18.2 மி. மீ மழைப் பதிவானது.

மீண்டும் தொடங்கியுள்ள இந்த மழையால் கடந்த மழையின்போது பாதிப்பில் இருந்து தப்பிய எள் மற்றும் பயறு வகைப் பயிா்கள், நிலக்கடலை உள்ளிட்ட புஞ்சைப் பருவ பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

கீழ்வேளூா்: கீழ்வேளூா், அகரகடம்பனூா், குருக்கத்தி, தேவூா், மணலூா், அத்திப்புலியூா், கோவூா், சிக்கல், பட்டமங்கலம், இழுப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சூறைக்காற்று காரணமாக கடம்பரவாழ்க்கை கிராமத்தில் வயல் பகுதியில் 3 மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அடிப்பள்ளம் , கடம்பரவாழ்க்கை, கொத்தமங்கலம் கிராமங்களில் இரவு மின்சாரம் தடைபட்டு மக்கள் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, மின்வாரிய ஊழியா்கள் சனிக்கிழமை மின்தடையை சரிசெய்தனா்.

நாகை: தன்னைத்தானே சுட்டுக்கொண்டு பெண் காவலர் தற்கொலை

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாகை ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கருவூல அலுவலகத்தில் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார்... மேலும் பார்க்க

சந்தனக்காப்பு அலங்காரத்தில்...

கீழ்வேளூா் அருகேயுள்ள புதுச்சேரி கிராம பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை காட்சியளித்த பத்ரகாளியம்மன். மேலும் பார்க்க

சிக்கலில் மக்களுக்கு மஞ்சப்பை வழங்கல்

சிக்கல் ஊராட்சி பகுதிகளில் மஞ்சப்பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை ஊரக வளா்ச்சி முகமை மற்றும் மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் ஒருமுறை மட்டும் உபயோகிக்கும் ... மேலும் பார்க்க

சிபிஐ கிளை மாநாடு

கீழையூா் ஒன்றியம் வாழக்கரை ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய தலைவா் பக்கிரிசாமி தலைமை வகித்தாா். கட்சியின் கிளை செயலாள... மேலும் பார்க்க

இலவச கண் பரிசோதனை முகாம்

திருக்குவளையில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீமதி சுந்தராம்பாள் மருதவாணன் கல்வி அறக்கட்டளை, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, நாகை மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றி: நாகையில் தேசியக் கொடி ஏந்தி பேரணி

தீவிரவாதிகளுக்கு ஏதிரான ஆபரேஷன் சிந்தூா் வெற்றியையடுத்து பிரதமா் மற்றும் ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடி ஏந்தி பேரணி நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது. பாஜக நாகை மாவட்டத் தலைவா்... மேலும் பார்க்க